முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பிளாட்பார்ம்ஸ் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை மட்டும் அல்லாமல் பல புதிய சேவைகளையும் அளிக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் பல தொழில்நுட்ப சேவைகளை உருவாக்கினாலும் பல புதிய தொழில்நுட்பத்தில் சேவைகளை அறிமுகம் செய்யப் பல நிறுவனத்தைக் கைப்பற்றி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் தற்போது அமெரிக்க நிறுவனத்தின் ஒன்றில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ பிளாட்பார்ம்ஸ்
ஜியோ பிளாட்பார்ம்ஸ் அமெரிக்காவின் டூ பிளாட்பார்மஸ் இன்க் இன்னும் நிறுவனத்தில் 25 சதவீத பங்குகளுக்குச் சுமார் 15 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே சில வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது டூ பிளாட்பார்ம்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.
டூ பிளாட்பார்ம்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், 5ஜி எனப் பல புதிய தொழில்நுட்பத்தில் சேவைகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. ஜியோவின் கனவுகளைப் பூர்த்திச் செய்வதில் டூ பிளாட்பார்மஸ் இன்க் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக டூ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில் ஒகு ஸ்பெஷல் உண்டு.
பிரணவ் மிஸ்திரி
சில வருடங்களுக்கு முன்பு சிக்ஸ்த்சென்ஸ் என்னும் தொழில்நுட்பம் மூலம் டெக் உலகை புரட்டிப்போட்ட பிரணவ் மிஸ்திரி உருவாக்கிய நிறுவனம் தான் இந்த டூ பிளாட்பார்மஸ் இன்க், இந்த நிறுவனத்தில் ஜியோ 25 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் பல புதிய சேவைகளை இந்தியாவிற்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு வர முடியும்.
ஆகாஷ் அம்பானி
டூ பிளாட்பார்மஸ் இன்க் நிறுவனத்தின் AI/ ML, AR, மெட்டாவெர்ஸ், வெப் 3.0 போன்ற முக்கியமான தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். இந்நிறுவனத்தின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு, இம்மெர்சிவ் கேமிங், மெட்டவெர்ஸ் ஆகியவற்றில் புதிய சேவைகளை அறிமுகம் செய்ய முடியும் என ஜியோ பிளாட்பார்ம்ஸ் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications