சமீபகாலமாக அதிகரித்து வரும் மோசடிகள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். அப்பாவி மக்களின் பணத்தை பறிப்பதற்காக புதுப்புது யுக்திகளை கையாண்டு மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இன்றெல்லாம் சில மொபைல்களில் ஸ்பேம் கால் என்ற பெயருடன் அழைப்பு வருகிறது. இதனால் பயனர்கள் தெரிந்து கொண்டு.. இது போன்ற அழைப்புகளை பிளாக் செய்து விடுகின்றனர். ஆனால் இந்த விஷயம் தெரியாமல் இருக்கும் பலர் இது போன்ற மோசடிகளில் சிக்கி தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்து வருகின்றனர்.
ஜம்ப்ட் டெபாசிட் ஸ்கேம்: பணத்தை பறிப்பதற்காக பல யுக்திகளை கையாளுகின்றனர். அப்படி புதிதாக தற்போது ஒரு யுத்தியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதுதான் ஜம்ப்ட் டெபாசிட் ஸ்கேம். இந்த ஜம்ப்ட் டெபாசிட் ஸ்கேம் என்பதைப் பயன்படுத்தி யூபிஐ பயனர்களுக்கு ஒரு சிறு தொகையை அனுப்புகின்றனர்.

அதன் பிறகு அந்தத் தொகையை மீண்டும் அனுப்பும் படி கோரிக்கை விடுகின்றனர். இந்த எதிர்பாராத வரவு காரணமாக பாதிக்கப்படுபவர்கள் தங்கள் வங்கி கணக்கின் பேலன்ஸை சரிபார்க்கின்றனர். அப்போது வங்கி விவரங்களை திறந்து தங்களது தனிப்பட்ட அடையாள எண் போன்ற விவரங்களை வழங்க பணம் அனுப்ப வேண்டி இருக்கிறது. அதோடு மோசடியாக அனுப்பப்பட்ட பணம் அங்கீகரிக்கப்படுகிறது.
இதை பயன்படுத்தி பிறரின் வங்கி விவரங்களை தெரிந்து கொண்டு கொள்ளையடிக்கின்றனர். எனவே தமிழ்நாடு குற்றபிரிவு போலீசார், ஆள் பேர் தெரியாத நபர்களிடமிருந்து பணம் அனுப்பப்பட்டால் எச்சரிக்கையாக இருக்கும் படி கூறியுள்ளனர்.
இந்த புதிய மோசடி குறித்து பல்வேறு புகார்கள் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் பதிவாகியுள்ளன. அதோடு தற்போது வங்கியின் பரிவர்த்தனை விவரங்களை டிராக் செய்து அதை வைத்து அழைப்பு விடுத்து இல்லாத தவறை செய்ததாக கூறி செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. எனவே உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை பத்திரமாக வைத்திருங்கள். டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அவற்றை பிளாக் செய்து ரிப்போர்ட் செய்யுங்கள்.
எச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?: UPI பயனர்கள் ஜம்ப்ட் டெபாசிட் மோசடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள 2 விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். உங்கள் வங்கி கணக்கில் வழக்கத்திற்கு மாறாக டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை கண்டால், பேலன்ஸை சரி பார்க்க 15 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். ஏனெனில் பணம் திரும்ப பெறுவதற்கு ஏதேனும் கோரிக்கைகள் வந்தால் அவை சற்று நேரத்தில் காலாவதியாகி விடும். அதன் பிறகு நீங்கள் உங்கள் பாலன்சை சரி பார்க்கலாம். கூடுதலாக உங்கள் கணக்கில் எதிர்பாராத அல்லது திடீர் கிரெடிட்-ஐ கண்டால் உடனடியாக அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையம் அல்லது சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளியுங்கள்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications