இந்தியாவில் விற்பனை பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வந்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாமல் பழைய மறைமுக வரி விதிப்பையே மத்திய மாநில அரசுகள் தொடர்கிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தால் மக்களுக்குப் பெரும் சுமையாக மாறிய நிலையில் சாமானிய மக்கள் எரிபொருள் மீது விதிக்கப்படும் மறைமுக வரியை நீக்கிவிட்டு ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தனர்.
கேரள உயர் நீதிமன்றம்
கேரள உயர் நீதிமன்றத்தில் பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு எதிராகப் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. இதற்குத் தலைமை நீதிபதி எஸ் மணிகுமார் தலைமையிலான பென்ச் ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில்
ஜிஎஸ்டி கவுன்சிலை ஏன் பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை என்பதற்கான விளக்கத்தை அடுத்த 10 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ பதிலை அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
செப்டம்பர் 17ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்ட போது அனைத்து மாநிலமும் வருவாய் அளவீடு பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு மறுப்புத் தெரிவித்தது. இதனால் ஜிஎஸ்டி கவுன்சில் வாக்கு எண்ணிக்கையில் பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்கள் ஜிஎஸ்டி அமைப்பிற்குள் இருந்தாலும், இதன் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாமல் மத்திய மாநில அரசுகள் அதிக வரி வருமானம் ஈட்டும் விதமாகப் பழையபடி மறைமுக வரி விதிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு கைகளுக்கு
இதேபோல் ஜிஎஸ்டி வரி வந்த பின்பு வரி வசூல் அனைத்தும் மொத்தமாக மத்திய அரசு கைகளுக்குச் செல்லும் காரணத்தால் மாநில அரசுக்கான ஆதிக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது. மேலும் வரி வருமான பங்கீடும் குறைந்த காரணத்தால் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் உடன் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
மாநில அரசு நிலை
இந்தச் சூழ்நிலையில் மாநில அரசுக்கு வரி ஆதாயம் கிடைக்கும் ஒரு சில பொருட்களில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்கள் இருக்கும் காரணத்தால் இதை விட்டுக்கொடுக்க மறுக்கிறது மாநில அரசுகள்.
வரி பங்கீடு
இதற்குப் பெரும் பிரச்சனையாக இருப்பது அதிக வருவாய் அளிக்கும் மாநிலத்திற்குக் குறைவான வரி பங்கீடு அளிப்பது தான். வரி வருமானத்திற்கு ஏற்றவாறு ஜிஎஸ்டி வரியை பிரித்துக்கொடுத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்களை எவ்விதமான பிரச்சனையுமின்றி ஜிஎஸ்டி வரி விதிக்க முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications