கடந்த 1804ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் மைக்கேல் ஃபிட்ஸ்ஜெரால்ட் லெவெல்லி என்பவர், கட்டுரை ஒன்றை படித்துள்ளார். அதில், இந்தியாவில் இருக்கும் கர்நாடக மாநிலம் கோலார் கிராமத்தில் தங்க சுரங்கம் உள்ளதாக இருந்துள்ளது. இதையடுத்து, 1870ஆம் ஆண்டு பெங்களூருவுக்கு வந்துள்ளார். அப்போது, பெங்களூரு ஆங்கிலேயர் வசம் இருந்ததால், இங்கேயே தங்கி, கோலார் பகுதியில் உள்ள தங்க சுரங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது, ஆங்கில தளபதியான வாரனுக்கு, இவர் மூலமாக தங்கசுரங்கம் இருக்கும் செய்தி கிடைத்தது. இதையடுத்து, தளபதி வாரன் முயற்சியில் மண்ணில் இருந்து தங்கத்தை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர்.
ஆனால், கிராம் கணக்கான தங்கம் மட்டும் தான் அவர்களுக்கு கிடைத்தது. இருப்பினும், தளபதி வாரனுக்கு இன்னும் அதீத ஆசை வந்துள்ளது. பின்னர், 1804 மற்றும் 1860-க்கு இடையில், கோலார் பகுதியில் ஏராளமான ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், இதில் எந்த பலனும் கிடைக்கவில்லை. பலரின் உயிர் போனது தான் மிச்சம். பின்னர், கோலார் பகுதியில் ஆராய்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், 1871ஆம் ஆண்டில் வாரனுக்கு பிறகு ஆங்கிலேயர் மைக்கேல் ஃபிட்ஸ்ஜெரால்ட் லெவெல்லிக்கு ஆர்வம் அதிகரித்தது.

இதனால், கோலார் பகுதியிலேயே அவர் ஒரு இடத்தை தேர்வு செய்தார். அந்த இடம் மைசூர் மகாராஜாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலையில், அங்கு அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டுமென மைசூர் மகாராஜாவிடம் அனுமதி கேட்டார். அவரும் 20 ஆண்டுகள் வரை அனுமதி கொடுத்தார். இதையடுத்து, 1875ஆம் ஆண்டு அந்த இடத்தில் முழு வீச்சி வேலை தொடங்கியது. அங்கு மின்சாரத்தை பயன்படுத்தி விளக்குகள் எரியவிட்டன. இதன் மூலமே இந்தியாவில் மின்சாரம் பெற்ற முதல் நகரமாக கோலார் ஆனது.
பின்னர், ஆங்கிலேய அரசின் அதிகாரிகளும், பொறியாளர்களும் அந்த பகுதியிலேயே வீடுகளை கட்டத் தொடங்கினர். பிறகு, அங்கு பல குடியிருப்புகள் வந்தது. அந்த இடத்திற்கு கேஜிஎஃப்,' லிட்டில் இங்கிலாண்ட்' என்று அழைக்கப்பட்டது. 1902ஆம் ஆண்டு வாக்கில், கேஜிஎஃப் மொத்த தங்க உற்பத்தில் உலகிலேயே 6-வது இடத்தை பிடித்தது. பின்னர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இந்த இடத்தை இந்திய அரசு தன் வசம் ஆக்கிக் கொண்ட நிலையில், 1956ஆம் ஆண்டு இந்த தங்க சுரங்கம் தேசியமயமாக்கப்பட்டது.
1970ஆம் ஆண்டில் பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நிறுவனம் அங்கு வேலை செய்ய தொடங்கிய நிலையில், ஆரம்பக்கட்ட வெற்றிக்குப் பிறகு லாபம் படிப்படியாக குறைந்தது. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், பலரும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். 2001ஆம் ஆண்டில் தங்கம் எடுப்பதையே அந்நிறுவனம் நிறுத்திவிட்டது. பின்னர், அந்த இடம் பாழடைந்து போனது.
கிட்டத்தட்ட 125 ஆண்டுகளில் கேஜிஎஃப்-இல் இருந்து 900 டன்கள் அளவுக்கு தங்கம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேஜிஎஃப்-இல் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க மத்திய அரசுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜூன் 2024இல் பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (BGML) நிறுவனத்திற்குச் சொந்தமான 1,003 ஏக்கர் நிலத்தில் உள்ள 13 குப்பைக் கிடங்குகளில் சுரங்கத்திற்கான மத்திய அரசின் முன்மொழிவுக்கு கர்நாடக அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியது. இந்தக் குப்பைக் கிடங்குகளில் கடந்த கால சுரங்க நடவடிக்கைகளின் கழிவுகளும் உள்ளன. இதில், தங்கமும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் குப்பைக் கிடங்குகளில் 32 மில்லியன் டன் பொருட்கள் உள்ளதாகவும், இதில் இருந்து சுமார் 23 டன் தங்கம் கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணி முழு வீச்சில் தொடங்கும் பட்சத்தில், ஆண்டுக்கு தங்க உற்பத்தி 750 டன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே அதிகளவு தங்கத்தை வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் நிலையில், ஆண்டுக்கு 800 - 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. KGF மீண்டும் தொடங்கப்பட்டால், இந்தியா தங்க இறக்குமதியை குறைக்கும். இதன் மூலம் கோடிக்கணக்கான அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்த முடியும். ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல்கள் கிடைத்தவுடன், ஆரம்ப மேற்பரப்பு நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும். சுற்றுச்சூழல் மற்றும் செயல்பாட்டு அனுமதிகள் முடிந்ததும் முழு அளவிலான உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிட்டபடி இந்தியாவில் மட்டும் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டால், உலகம் இந்தியாவை திரும்பி பார்ப்பது நிச்சயம்.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!



Click it and Unblock the Notifications