35,575 ஊழியர்கள், 3.81 பில்லியன் டாலர் கடன்.. அமேசானுக்கு எதிராக புதிய வழக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசான் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் நிறுவனங்கள் மத்தியிலான வர்த்தக ஒப்பந்தத்திற்குத் தடை உத்தரவைச் சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பாயத்தில் பெற்ற நிலையில் 3.4 பில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தம் தடை பெற்றது.

இந்தத் தடை உத்தரவு இந்தியாவில் செல்லாது எனப் பியூச்சர் குரூப் வழக்கு தொடுத்த நிலையில் உயர் நீதிமன்றம் சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பாய அமைப்பின் உத்தரவை இந்தியாவில் ஏற்க சட்டம் அனுமதி உள்ளது. இதனால் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான ஒப்பந்தம் தடை பெற்றது.

மேலும் இந்த உத்தரவை எதிர்த்துக் கீழ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்தச் சூழ்நிலையில் கிஷோர் பியானி தலைமையிலான பியூச்சர் குரூப் சனிக்கிழமை புதிதாக ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது.

சுமார் 6000 பக்கம் கொண்ட இந்த அறிக்கையில் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தவில்லை எனில் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனப் பியூச்சர் குரூப் தெரிவித்துள்ளது.

35,575 ஊழியர்கள், 3.81 பில்லியன் டாலர் கடன்.. அமேசானுக்கு எதிராக புதிய வழக்கு..!

இந்த அறிக்கையில் கிஷோர் பியானி-யின் பியூச்சர் குரூப் சார்பில் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் சுமார் 35,575 ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். இதுமட்டும் அல்லாமல் இந்திய வங்கிகள் மற்றும் பத்திரங்கள் வாயிலாகப் பெற்ற 3.81 பில்லியன் டாலர் அளவிலான கடனை திருப்பி அளிக்க முடியாத நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் இந்தக் கோரிக்கையே ஏற்றுத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு கொடுத்துள்ளது. ஆனால் இந்த மனு மூலம் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படாது எனக் கணிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் மத்தியிலான வர்த்தகம் கிட்டதட்ட தோல்வி அடைந்துவிட்டதாகக் கருதப்படும் நிலையில், 2.69 பில்லியன் டாலர் அளவிலான கடனில் தவிக்கும் பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்ற அமேசான் திட்டமிட்டு வருவதாகத் தகவல் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்தத் தகவல் மூலம் பியூச்சர் குரூப் நிறுவனப் பங்குகள் இன்று 17 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆனால் தற்போது பியூச்சர் குரூப் தாக்கல் செய்துள்ள புதிய மனுவின் மூலம் அமேசான் - பியூச்சர் குரூப் மத்தியிலான ஒப்பந்தத்தில் எவ்விதமான சாதகமான வாய்ப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

உற்பத்திக்கு பெஸ்ட் இந்தியா தான்.. உலகளவில் 2வது இடம்.. அப்போ முதல் இடம்..?! உற்பத்திக்கு பெஸ்ட் இந்தியா தான்.. உலகளவில் 2வது இடம்.. அப்போ முதல் இடம்..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kishore Biyani filed a new case against Amazon

Kishore Biyani filed a new case against Amazon
Story first published: Saturday, August 28, 2021, 18:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X