தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வெகு சில வங்கிகளில் மிகவும் முக்கியமான வங்கியாக இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கியின் மீது மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து moratorium கட்டுப்பாடுகளை விதித்ததைத் தொடர்ந்து புதன்கிழமை வர்த்தகத்தில் 20 சதவீதம் சரிவைப் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், 2வது நாளாக இன்றும் லோவர் சர்கியூட் அளவை அடைந்துள்ளது.
Recommended Video
லட்சுமி விலாஸ் வங்கி சுமார் 25 சதவீதம் அளவிலான வராக்கடனை வைத்துள்ள நிலையில் இவ்வங்கியைத் திவாலாகும் நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுடன் ரிசர்வ் வங்கி இவ்வங்கியை DBS வங்கியுடன் இணைக்கத் திட்டம் வெளியிட்டுள்ள நிலையிலும் முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.
இதன் எதிரொலியாகவே 2வது நாளாக இன்றும் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 20 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது.
பங்குகள் தொடர் வீழ்ச்சி
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் விலை 15.60 ரூபாய்க்கு முடிவடைந்தது. செவ்வாய்க்கிழமை மாலையில் தான் ரிசர்வ் வங்கி moratorium கட்டுப்பாடுகளை விதித்து இவ்வங்கியின் 25,000 ரூபாய்க்கு அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்யக் கூடாது என அறிவித்தது.
முதல் நாள்
இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் moratorium கட்டுப்பாடுகளின் எதிரொலியாக வர்த்தகம் துவக்கம் முதலே சரிவைச் சந்தித்த லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 15.60 ரூபாயில் இருந்து 12.45 ரூபாய் வரையில் சரிந்தது.
இந்தத் தடாலடி வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
2வது நாள்
லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் மீது moratorium கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு 2வது நாளான இன்று வியாழக்கிழமையும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தின் காரணமாகத் தொடர் வீழ்ச்சி பாதையில் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 12.45 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரையில் சரிந்து 19.68 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
10,000 கோடி ரூபாய்
லட்சுமி விலாஸ் வங்கியில் மக்களுக்குத் தங்களது டெப்பாசிட் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் அளவிற்குப் போதுமான நிதி உள்ளதாகவும், மக்கள் யாரும் பணம் குறித்துப் பயப்பட வேண்டாம் எனத் தெரிவித்த பின்பும் மக்கள் புதன்கிழமை மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை இவ்வங்கியில் இருந்து வெளியில் எடுத்துள்ளனர்.
மறுபரிசீலனை
இந்நிலையில் லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகக் குழு ரிசர்வ் வங்கி கொடுத்த DBS வங்கி இணைப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆலோசனை செய்து வருகிறது.
இரு வங்கிகள் மத்தியிலான இணைப்பு நவம்பர் 20ஆம் தேதி தான் இறுதி முடிவு தெரியும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications