முன்பு பெண்கள் உள்ளாடைகளை குறித்து வெளிப்படையாக பேச, வாங்க தயங்கினர். அந்த நேரத்தில் பெண்கள் உள்ளாடை சந்தையில் வளமான வர்த்தக வாய்ப்பு இருப்பதை ரிச்சா கர் மற்றும் கபில் சுரேகர் ஆகியோர் கண்டறிந்தனர்.
இதனையடுத்து 2011ல் அவர்கள் இருவரும் ஆன்லைன் உள்ளாடை தளமான ஜிவாமேயை (zivame) தொடங்கினர். இது பெண்களுக்கு தொந்தரவில்லாத ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை வழங்கியது. அதேசமயம் நிறுவனம் ஆரம்ப வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

2015-16ம் நிதியாண்டில் நிறுவனத்தின் நஷ்டம் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில் 2017ல் ரிச்சா கர் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். இதனையடுத்து நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அடிக்கடி மாற்றங்கள் நடந்த வண்ணம் இருந்தது.
இறுதியாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக லாவண்யா பச்சிசியா பொறுப்பேற்றார். அவர் நஷ்டத்தை படிப்படியாக குறைத்தார். 2020ல் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் சுமார் ரூ.1,300 கோடிக்கு ஜிவாமே நிறுவனத்தை கையகப்படுத்தியது.
லாவண்யா பச்சிசியாவின் தலைமையின் கீழ் கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஜிவாமே அதன் அனைத்து விற்பனை பிரிவுகளிலும் லாபத்தை ஈட்டியுள்ளது. அந்த நிதியாண்டில் ஜிவாமேவின் வருவாய் 150 சதவீதம் அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் லாவண்யா பச்சிசியா. இவர் பெங்களூருவில் உள்ள கிறிஸ்ட் கல்லூரியில் பி.காம் முடித்தார். பின்பு ஐ.சி.டபுள்யூ.ஏ. மற்றும் சி.ஏ. முடித்தார். வணிக உத்தி, நிதி, மேலாண்மை மற்றும் வணிக திட்டமிடல் போன்ற பல்வேறு துறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர்.
கடந்த 6 ஆண்டுகளாக ஜிவாமே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன் அவர் நைக்கில் நிதிக் கட்டுப்பாட்டாளராகவும், எர்ன்ஸ்ட் அண்ட் யங் குளோபல் லிமிடெட் நிறுவனத்தின் தணிக்கை நிர்வாகியாகவும் பணியாற்றினார்.
லாவண்யா பச்சிசியா பேட்டி ஒன்றில், ஜிவாமே ஒரு முதல் டிஜிட்டல் பிராண்டாக செயல்பட்டது, அதன் சொந்த இணையதளத்தில் இருந்து செயல்பட்டு சந்தைகள் மூலம் விற்பனை செய்து, அதன் சில்லரை விற்பனையை நிலை நிறுத்தியது. ஆனால் கடந்த 2-3 ஆண்டுகளில் (ரிலையன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு) குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிறுவனம் 170க்கும் மேற்பட்ட தனியுரிம சில்லரை விற்பனை கடைகளை அமைத்துள்ளது. இது முதலில் 50க்கும் குறைவாக இருந்தது. இது எங்கள் சில்லரை வர்த்தகத்தில் கணிசமான விரிவாக்கத்தை குறிக்கிறது.
பொருத்தமற்ற துணிகள், அளவு பொருத்தமின்மை மற்றும் ஜீரோ பிரைவசி காரணமாக பெண்கள் உள்ளாடைகளை எடுக்க சிரமப்படுகிறார்கள். ஆனால் ஜிவாமே அனைத்து அளவுகள், வடிவங்கள் மற்றும் வயதுடைய பெண்களுக்கு வசதியான நெருக்கமான ஆடைகளை வழங்க புதுமையான தொழில்நுட்பத்தை வைத்திருக்கிறது.
70 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் சரியான அளவு உள்ளாடைகள் அணிவதில்லை. இந்த பிரச்சனையை தீர்ப்பதில் முன்னோடியாக ஜிவாமே உள்ளது மற்றும் விரிவான வரம்பை வழங்குகிறது. 28 முதல் 50 வரை கிடைக்கும். 34.5 போன்ற அரிதான ஒன்றையும் நீங்கள் வாங்கலாம். இது பாரம்பரிய கடைகளில் பெரும்பாலும் இல்லாத திறன்.
மேக் இன் இந்தியா முன்முயற்சியுடன், அதிக விற்பனையாளர்களுடன் இந்தியாவில் உற்பத்திக்கு மாறியுள்ளோம். தள்ளுபடியை விட உண்மையான விலை நிர்ணயம் என்ற கருத்தை நிறுவனம் கடைபிடிக்கிறது. ஷாப்பிங் ஆன்லைன் அல்லது விற்பனை நிலையங்கள், பெருநகரங்கள் அல்லது நகரங்களில் நடந்தாலும் எல்லா சேனல்களிலும் விலைகள் மற்றும் தள்ளுபடிகள் ஒரே மாதிரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications