இந்தியாவின் சிறந்த ஆடம்பர ஹோட்டல்களில் ஒன்று லீலா ஹோட்டல்ஸ். புரூக்ஃபீல்ட் ஸ்க்லோஸ் பெங்களூரு நிறுவனம் லீலா பிராண்டின் கீழ் ஆடம்பர ஹோட்டல்களை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறது. லீலா ஹோட்டல்ஸ் தொடங்கி 40 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், புரூக்ஃபீல்ட் ஸ்க்லோஸ் பெங்களூரு நிறுவனம் ரூ.3,500 கோடி திரட்டும் நோக்கில் லீலா ஹோட்டல்ஸின் ஐபிஓ மேற்கொண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்நிறுவனத்தன் ஐபிஓ தொடங்கியது. 28ம் தேதி (புதன்கிழமை) நிறைவடைகிறது.
மனைவி பெயர்
லீலா ஹோட்டல்ஸ் பெயரின் பின்னணியில் மனைவி மீதான ஒரு ராணுவ வீரரின் காதல் உள்ளது. 1986ல் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கேப்டன் சிபி கிருஷ்ணன் நாயர் சங்கிலித்தொடர் ஹோட்டல் நிறுவனமான லீலா ஹோட்டல்ஸை தொடங்கினார். தனது மனைவி லீலாவின் நினைவாக இந்த சங்கிலித்தொடர் ஹொட்டலுக்கு அவர் பெயரிட்டார். முதலில் மும்பையில் "தி லீலா மும்பை" என்ற பெயரில் அவர் ஹோட்டலை தொடங்கினார்.

ஒரு வெற்றிகரமான தொழிலதிபரான கேப்டன் நாயர் தனது அனுபவத்தை பயன்படுத்தி உலகளவில் ஆடம்பர வசதிகள் மற்றும் சிறந்த இடங்களுக்கு பெயர் பெற்ற ஒரு ஆடம்பர விருந்தோம்பல் சங்கிலியை நிறுவினார். 2014ம் ஆண்டு கேப்டன் நாயரின மரணத்தை தொடர்ந்து, நிறுவனம் தொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்து வந்தது. ரூ.5,000 கோடி அளவுக்கு கடன் ஏற்பட்டது.
கடன்
நாயரின் மகன்கள் விவேக் மற்றும் தினேஷ் நாயர் ஆகியோர் இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் தொழிலை மீண்டும் வளர்ச்சிக்கு பாதைக்கு திருப்ப முயற்சித்த போதிலும், கடனை திரும்ப செலுத்த முடியாததால் 2018ல் லீலா ஹோட்டல்ஸ் விற்கப்பட்டது. லீலா ஹோட்டல்ஸ் சொத்து கேப்டன் நாயரின் மகன்களின் கைகளுக்கு சென்ற ஐந்து ஆண்டுகளுக்குள், இந்த சொகுசு ஹோட்டலின் பிராண்ட் உள்பட பெரும்பாலான சொத்துக்கள் கனடாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான புரூக்ஃபீல்ட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துக்கு விற்கப்பட்டன.
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் அருகே உள்ள நிலத்தையும், டெல்லி, உதய்பூர், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள நிலம் மற்றும் மும்பையில் உள்ள சொத்துக்கான உரிம ஒப்பந்தங்களையும் நிறுவனம் பெற்றது. முழு ஒப்பந்தமும் ரூ.3,950 கோடியாக மதிப்பிடப்பட்டது. இதில் 206 அறைகள் கொண்ட கோவா சொத்தும் அடங்கும். கோவா சொத்து மட்டும் ரூ.721 கோடிக்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு அறையின் விலை சுமார் ரூ.3.5 கோடி.
ஐபிஓ
லீலா ஹொட்டல்ஸின் ஐபிஓ மே 26ம் தேதி தொடங்கியது. நாளை முடிவடைகிறது. இந்நிறுவன ஐபிஓவின் மொத்த அளவு ரூ.3,500 கோடியாகும். இதில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 5.75 கோடி பங்குகளின் புதிய பங்கு வெளியீடு மற்றும் ரூ.1,000 கோடி மதிப்புள்ள 2.30 கோடி பங்குகளின் ஆஃபர் பார் சேலும் அடங்கும். மே 29ம் தேதியன்று பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். ஜூன் 2ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பங்குகள் பட்டியலிடப்படும்.
2030ல் தங்கம் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா..? இப்போ எவ்வளவு வாங்க முடியுமோ வாங்கிகோங்க..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications