தமிழ்நாட்டில் பெண்களை வேலைவாய்ப்புகள் சந்தையில் ஈர்த்து அவர்களின் பங்கீட்டை அதிகரிப்பது மூலம் தனிநபர் வருமானம் மற்றும் குடும்ப நிதி நிலையை மேம்படுத்த பல கொள்கை, சேவைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
உதாரணமாக இலவச பஸ் சேவையில் துவங்கி பல திட்டங்களின் விளைவாக தற்போது பெண்கள் கல்லூரி படிப்பை முடித்து பணிக்கு செல்ல துவங்கியுள்ளது. இதேவிட முக்கியமாக உற்பத்தி துறையிலும் பெண்களின் பங்கீடு அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்த நிலையில் பெண்களுக்கு பணியிடத்தில் கூடுதல் பலத்தை கொடுக்கும் வகையில் பெண்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு வழங்க கூறிய வழக்கு தொடுக்கப்பட்டது. இது இன்று மதுரை நீதிமன்றம் விசாரித்த நிலையில் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு பெண்களுக்கு முழு ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு வழங்கும் புதிய கொள்கையை அரசு உருவாக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது.
இப்புதிய கொள்கையை தமிழ்நாடு அரசு கொண்டு வருவது மூலம் பணியிடங்களில் பெண்களின் நலன் பாதுகாப்பது மட்டும் அல்லாமல் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாக இருக்கும்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தற்போது தமிழ்நாசு அரசிடம் தனிப்பட்ட கொள்கை முடிவுகள் இதுவரை எடுக்காவிட்டாலும், இது தொடர்பாக ஆலோசனை செய்யலாம், இது பணிக்கு வரும் பெண்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் வலியால் காடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், பெண்களின் உடல்நலத்தை காக்கும் பொறுத்து முழு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொடுக்கப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் ஆலோசனை செய்ய கூறி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கும் வேளையில், இந்த கோரிக்கை புதிய அரசுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து முடிவை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்தியாவில் பல தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு தற்போது மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளித்து வருகிறது. இதேவேளையில் கர்நாடக அரசு அதிகாரப்பூர்வ விடுமுறையை அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரையில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை குறித்து தனது நிலைப்பாட்டை எடுக்கவில்லை. உண்மையில் இத்தகைய விடுமுறை வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குட் நியூஸ் தான்.
இதேவேளையில் தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்கும் பட்சத்தில் தனியார் நிறுவனங்கள் இதை எப்படி கையாளுகிறது என்பதையும் கருத்தில் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். விஜய் தலைமையிலான அரசு இதற்கு எத்தகைய முடிவை எடுப்பார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications