இந்தியாவில் வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வங்கிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஆய்வுகளுக்குப் பின்பு கடன் அளிக்கத் துவங்கியுள்ளது. ஆனாலும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட பல வங்கிக் கடன்களில் மோசடி செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் வங்கி மோசடிகளுக்குப் பின்பு இந்தியாவில் ஒவ்வொரு வங்கியின் வாராக் கடன், வங்கி மோசடிகள் அளவுகள் அதிகளவில் கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே அதிக வங்கி மோசடிகள் நடந்துள்ள இடம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
முதல் இடம்
2021-22 ஆம் நிதியாண்டின் முதல் 9 மாத தரவுகள் அடிப்படையில் இந்தியாவிலேயே அதிகத் தொகை கொண்ட வங்கி மோசடிகள் பதிவாகியுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லி, தெலுங்கானா ஆகியவை முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளது.
டெல்லி, தெலுங்கானா
இதன் படி 2021-22 ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதத்தில் மகாராஷ்டிரா 124 கோடி ரூபாயும், டெல்லியில் 93.07 கோடி ரூபாயும், தெலுங்கானாவில் 89 கோடி ரூபாய் அளவிலான வங்கி மோசடிகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா
4வது இடத்தில் 59.7 கோடி ரூபாய் உடன் கேரளாவும், 5வது இடத்தில் 47.08 கோடி ரூபாய் உடன் தமிழ்நாடும், 6வது இடத்தில் 40.47 கோடி ரூபாய் உடன் பஞ்சாப் மாநிலமும் உள்ளது. கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் 241.59 கோடி ரூபாய் அளவிலான வங்கி மோசடிகள் பதிவாகியுள்ளன.
வங்கி மோசடிகள்
இதுவே 2020-21 ஆம் நிதியாண்டில் மொத்தம் 6807 கோடி ரூபாய் அளவிலான வங்கி மோசடிகள் பதிவாகியுள்ளன. இக்காலகட்டத்தில் டெல்லி அதிகப்படியாக 1530 கோடி ரூபாய் வங்கி மோசடி பதிவாகி முதல் இடத்தைப் பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் 9 மாதத்தில் மகாராஷ்டிரா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
648 கோடி ரூபாய்
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் அளித்த தகவல்கள் படி 2012-22ஆம் நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் 648 கோடி ரூபாய் அளவிலான வங்கி மோசடிகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது கோட்டாக் மஹிந்திரா வங்கி தான்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications