விளையாட்டு வீரர்களுக்கு வலை வீசும் வங்கிகள்... SBI பிராண்ட் தூதராக எம்.எஸ்.தோனி

கடந்த பல ஆண்டுகளாக வங்கிகள் தங்களது பிராண்ட் தூதராக விளையாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. பிரபலமான விளையாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்வதால் வங்கிகளுக்கு தங்களது பிராண்ட் மற்றும் விளம்பரம் வாடிக்கையாளர்களிடம் எளிதாக சென்றடையும்.

அதேசமயம், விளையாட்டு வீரருக்கு அது பெரிய நிதியுதவி மற்றும் அங்கீகாரமாகவும் இருக்கும். சில வங்கிகள் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கியுள்ளது. உதாரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இந்திய ரிசர்வ் வங்கியில் ஊழியர்களாக உள்ளனர்.

விளையாட்டு வீரர்களுக்கு வலை வீசும் வங்கிகள்... SBI பிராண்ட் தூதராக எம்.எஸ்.தோனி

தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) மகேந்திர சிங் தோனியையும், பெடரல் வங்கி பேட்மிண்டன் வீரர் பிரணாயையும் தங்களது பிராண்ட் தூதர்களாக ஒப்பந்தம் செய்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான எம்.எஸ். தோனி, இந்தியாவுக்கு இரண்டு உலகக் கோப்பைகளை பெற்று தந்தவர். ஆட்டத்தை முடித்து வைப்பதை ஒரு கலையாக மாற்றியவர்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், அவர் இன்னும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்.) விளையாடி வருகிறார். இவரது தலைமையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 முறை கோப்பையை வென்றது.

தோனியை பிராண்ட் தூதராக ஒப்பந்தம் செய்தது குறித்து நாட்டின் பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், மன அழுத்தமான சூழ்நிலைகளில் அமைதியை காத்துக் கொள்ளும் அவரது திறமையும், தெளிவான சிந்தனையும் மற்றும் நிர்பந்தத்தின்கீழ் விரைவான முடிவெடுக்கும் அவரது புகழ் பெற்ற திறனும், நாடு முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்பு கொள்வதற்கு எஸ்.பி.ஐ.யுடன் எதிரொலிக்கும் சிறந்த தேர்வாக அவரை ஆக்குகிறது என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச பேட்மிண்டன் தர வரிசையில் இந்தியாவின் சிறந்த ஒற்றையர் வீரரான பிரணாய் 14வது இடத்தில் உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு 6வது இடத்தில் இருந்தார். 2023ம் ஆண்டு அவரது மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. மலேசியா மாஸ்டர்ஸில் தனது முதல் பி.டபுள்யூ.எஃப். உலக டூர் பட்டத்தை வென்றார். மேலும் 41 ஆண்டுகளில் ஆசிய போட்டிகளில் பேட்மிண்டனில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார்.

பிரணாயை பிராண்ட் தூதராக ஒப்பந்தம் செய்தது குறித்து பெடரல் வங்கியின் சி.எம்.ஓ. எம்.வி.எஸ்.மூர்த்தி கூறுகையில், உலக அளவில் சாம்பியன்களாக விளையாடுவதால், உடற்பயிற்சி, பயிற்சி, உணவு, மன ஆரோக்கியம் போன்ற நிர்வகிக்க பல நகரும் பகுதிகள் உள்ளன.

இது (பிரணாய் ஒப்பந்தம்) விளையாட்டுகளில் மனித விருப்பத்தின் முயற்சியை அங்கீகரிப்பதும், மதிப்பதும் எங்கள் வழி. அவர் நம் நாட்டின் அடுத்த தலைமுறையின பிரதிநிதி. அவரது ஒழுக்கம் மற்றும் நிலைத்தன்மையின் உணர்வு அவரை தரவரிசையில் உயர உதவியது. செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை அவர் பிராண்டுடன் எதிரொலிக்கிறது என்று தெரிவித்தார்.

பிரணாய் மற்றும் பல வீரர்களை நிர்வகிக்கும் பேஸ்லைன் வென்ச்சர்ஸின் நிர்வாக இயக்குனர் துஹின் மிஸ்ரா கூறுகையில், பிரணாய் உறுதி மற்றும் விடாமுயற்சியுடன் வருகிறார். மேலும் அவர் தனது பல செயல்பாடுகளால் வரலாற்றை படைத்துள்ளார்.

இந்த குணங்களில் தான் தாங்களும் நிற்கிறோம் என்பதை பெடரல் வங்கி காட்ட முயன்றது. அதேவேளையில், விளையாட்டு வீரர் நிலைப்பாட்டில் பார்த்தால், அவர்களை ஆதரிக்கும் நிறுவனம் உங்களிடம் இருந்தால் அது பெரிய ஊக்கமாகும். இது நிதி ரீதியாக பெரிய பலம் மற்றும் அங்கீகாரம் ஆகும் என்று தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+