பெங்களூரு: இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் கொடிக்கட்டி பறந்த ஒரு நிறுவனம் இன்று கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறது பைஜூஸ் நிறுவனம். சிஇஓ ராஜினாமா செய்த பின்பு பல போராத்திற்கு பின்பு தன் ஊழியர்களுக்கு சம்பளமே கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் கட்டமைப்பை மாற்றி அமைத்துள்ளது பைஜூஸ் நிர்வாகம். இந்தியாவின் புகழ்பெற்ற டிஜிட்டல் கல்வி சேவை தளமான பைஜூஸ் வேகமாக வளர்ந்து வந்தது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று மற்றும் அதற்குப் பிந்தைய காலத்தில் பைஜூஸ் நிறுவனம் அசுர வளர்ச்சியை பெற்றது.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே பைஜூஸ் நிறுவனம் கடும் வீழ்ச்சியில் இருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பைஜூஸ் நிறுவனர் தான் திவால் ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது பைஜூஸ் நிறுவனம் .
பைஜூஸ் கடந்த ஜனவரி மாதம் முதலே ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை. பலர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு சரியான தேதியில் ஊதியம் வழங்கவில்லை. இந்த நிலையில் புதிய கொள்கை ஒன்றை பைஜூஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
விற்பனை பிரிவு மற்றும் எக்ஸாம் பிரிபரேஷன் பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு இனி வருவாய் இணைக்கப்பட்ட சம்பளம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது வாராந்திர வருவாய் அடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி விற்பனை பிரதிநிதிகள் அந்த வாரத்தில் எவ்வளவு விற்பனை விகிதத்தை காட்டுகிறார்களோ அதற்கு ஏற்ப அவர்களது வருவாயானது இருக்கும். அதாவது வாராந்திர விற்பனை விகிதத்தில் 50% என்ற முறைப்படி இனி சம்பளம் வழங்கப்படும் என்றும் வாரந்தோறும் இந்த ஊதியம் வழங்கப்பட்டு விடும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது .
இதனால் பைஜூஸ் நிறுவனம் விற்பனை பிரிவில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியத்தை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது. வாராந்திர வருவாய் அடிப்படையில் சம்பளம் வழங்க இருப்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பைஜூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் விற்பனை எதுவும் பெற்று தராத ஊழியர்களுக்கு எந்த சம்பளமும் கிடைக்காது என்றும் பைஜூஸ் கூறியுள்ளது.
ஒரு தனிப்பட்ட நபர் எப்படி நிறுவனத்திற்கு வருவாயை கொண்டு வருகிறார் என்பதையும், அந்த குழுவில் அந்த நபரின் பதவி என்ன, ஒவ்வொரு குழுவிலும் உள்ள விற்பனை பிரதிநிதிகள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஊதிய விகிதமானது நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த வருவாய் அடிப்படையிலான ஊதியம் என்ற நடைமுறை விற்பனை பிரதிநிதிகளுக்கு வாராந்திர ஊதியத்தை வழங்கி விடும் என்றாலும், தங்களுக்கு மாதாந்திர ஊதியத்தில் கிடைத்த மற்ற சலுகைகள் இதில் கிடைக்காது என கவலை தெரிவிக்கின்றனர் ஊழியர்கள்.
செயல்பாடு அடிப்படையிலான வருவாய் என்பது தங்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுப்பதாகவும் ஒரு நிச்சயமற்ற நிலையை உருவாக்கி இருப்பதாகவும் பைஜூஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவில் இருக்கக்கூடிய ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications