இந்தியாவில் 22 ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி வரி திருத்தம் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு பொருட்கள் மீதான வரி என்பது கணிசமாக குறைக்கப்பட்டு இருக்கிறது . இதன் எதிரொலியாக பல்வேறு பொருட்களின் விலையும் குறைய இருக்கிறது .
குறிப்பாக இந்தியாவில் சிறிய ரக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு வாகன விற்பனை நிறுவனங்களும் தங்கள் நிறுவன வாகனங்களின் விலையை குறித்து தொடர்ச்சியாக அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி கார் விற்பனை நிறுவனமான மாருதி சுசுகி ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை முழுவதுமாக வாடிக்கையாளர்களுக்கு தருவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

தங்கள் நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யக்கூடிய பல்வேறு கார்களின் விலையையும் குறைத்து அறிவித்துள்ளது. வரும் 22 ஆம் தேதியிலிருந்து இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என்று மாருதி சுசுகி தெரிவித்திருக்கிறது. இதன்படி மாருதி சுசுகி நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யப்படக்கூடிய என்ட்ரி லெவல் கார்களான ஆல்டோ கே10 (Alto K10), எஸ்பிரஸோ(S-Presso) கார்கள் விலைகள் குறைந்துள்ளன.
எஸ்பிரஸோ கார் 1.29 லட்சம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆல்டோ கே10 கார்கள் 1.07 லட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. மாருதி சுசுகி விற்பனை செய்யக்கூடிய எஸ்யூவி ரக கார்களின் விலையும் குறைந்து இருக்கிறது. பிரஸ்ஸா , ஃபிரான்க்ஸ் கார்களின் விலை 1.12 லட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு சிறிய ரக கார்கள் விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைத்து இருக்கிறது. எனவே அதன் அடிப்படையில் மாருதி சுசுகி தங்களுடைய கார்களின் விலையையும் குறைத்து இருக்கிறது. இந்தியாவில் சிறிய ரக கார்களின் விற்பனை குறைந்துவிட்டது என தொடர்ச்சியாக மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து வந்த நிலையில் பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் விதமாக இந்த ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு வந்திருக்கிறது.
கடந்த மாதம் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான சியாம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த மாதம் ஃபேக்டரிகளில் இருந்து டீலர்ஷிப்புகளுக்கு 3, 21,840 கார்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.8 சதவீதம் குறைவாகும்.
மாருதி சுசுகியின் இந்த விலை குறைப்பு நடவடிக்கையின் மூலம் மாருதி சுசுகி என்ட்ரி லெவல் கார்களான ஆல்டோ , செலரியோ , வேகனார் உள்ளிட்டவற்றுக்கு இந்த பண்டிகை காலத்தில் நல்ல டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் விலை சுமார் 71 ஆயிரத்திலிருந்து 1.29 லட்சம் வரை குறைந்திருக்கிறது என்பதால் மிடில் கிளாஸ் மக்கள் அதிக அளவில் இவற்றை வாங்க முன் வருவார்கள் .
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications