இந்தியாவில் மேலும் ஒரு KGF.. பெரிய தங்கப்புதையல் கண்டுபிடிப்பு.. தங்கம் விலை குறையுமா?

மத்தியபிரதேசம்: உலகின் அதிக மதிப்பு கொண்ட ஒரு பொருளாக இருக்கிறது தங்கம். பூமிக்கு அடியில் கிடைக்கும் தனிமங்களை பிரித்தெடுத்துபதன் மூலம் தான் தங்கம் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் பல்வேறு நாடுகளும் பூமிக்கடியில் இருக்கும் தங்கத்தை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகின்றன.

தங்கப்புதையல்: இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் சீனாவும் பாகிஸ்தானும் தங்கள் நாடுகளில் புதிதாக தங்கம் இருப்பதை கண்டுபிடித்து அறிவிப்பு வெளியிட்டன. இந்நிலையில் இந்தியாவிலும் பூமிக்கடியில் மிகப்பெரிய அளவில் தங்கம் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் என்றாலே இரும்பு தாதுக்கு பெயர் போனது. அளவுக்கு அதிகமாக அங்கு கிடைக்கக்கூடிய இரும்பு தாது தான் அந்த நகரத்தின் அடையாளமாகவே இருக்கிறது. ஆனால் இந்த நகரம் ஒரு மிகப்பெரிய தங்கப் புதையலை கொண்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் மேலும் ஒரு KGF.. பெரிய தங்கப்புதையல் கண்டுபிடிப்பு.. தங்கம் விலை குறையுமா?

ஜபல்பூரின் தங்கச்சுரங்கம்: இந்தியாவின் புவியியல் ஆய்வு அமைப்பு மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் பகுதியில் இருக்கக்கூடிய மக்வான் கொலேரி பகுதியில் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வுகளுக்கு உட்படுத்தியது. அதில் பூமிக்கடியில் பெரிய அளவில் தங்கம் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியில் அதிக அளவிலான இரும்பு தாது மற்றும் மங்கனீஸ் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது . இங்கே பெருமளவில் இரும்பு தாது வெட்டி எடுக்கப்பட்டு பிராசஸ் செய்யப்படுகிறது.

100 ஹெக்டேருக்கு தங்கம்: இந்த பகுதி பெரிய அளவில் தங்கத்தையும் தன்னகத்தை கொண்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது . தங்கம் மற்றும் செம்பு இந்த பகுதியில் அதிகளவில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர் . 100 ஹெக்டேர் பரப்பளவுக்கு இங்கே தங்கம் புதைந்து கிடப்பதாக தெரிவிக்கும் அதிகாரிகள் இதனை பிரித்தெடுத்தால் பல லட்சம் டன்கள் தங்கம் நமக்கு கிடைக்கும் என கூறுகின்றனர்.

ஆய்வு முடிவுகள்:பல்வேறு தனிமங்கள் நிறைந்த இந்த மண்ணை பல கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தி ரசாயன ஆய்வுகளும் நடத்தியதில் தங்கம் ,செம்பு மற்றும் பிற அறிய வகை தனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். இந்திய புவியியல் ஆய்வு அமைப்பின் இந்த அறிவிப்பை அடுத்து இங்கே தங்க சுரங்கம் அமைப்பதற்கான விரிவான திட்ட ஆய்வறிக்கை தயாரிக்கப்படும்.

இந்தியாவில் மேலும் ஒரு KGF.. பெரிய தங்கப்புதையல் கண்டுபிடிப்பு.. தங்கம் விலை குறையுமா?

மாறப்போகும் ஜபல்பூர்: ஆய்வறிக்கையை தொடர்ந்து இங்கே சுரங்கம் அமைத்து தங்கத்தை வெட்டி எடுப்பதற்கான ஒப்பந்தம் விடும் பணிகளை அரசு முன்னெடுக்கும். தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இதில் ஒப்பந்தம் பெற முடியும். எந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைக்கிறதோ அந்த நிறுவனம் சுரங்கம் அமைத்து தங்கத்தை பிரித்தெடுக்கும். இந்த பணிகள் தொடங்கினால் ஜபல்பூரின் அடையாளமே மாறிவிடும்.

தங்கம் விலை குறையுமா: பொருளாதார ரீதியாகவும் கட்டமைப்பு வேலைவாய்ப்பு ரீதியாகவும் ஜபல்பூரும் மத்திய பிரதேச மாநிலமும் இந்தியாவும், வளர்ச்சி பெறும். இந்தியாவிலேயே தங்கம் உற்பத்தி செய்யப்படுவது நாம் பெருமளவில் தங்கத்தை இறக்குமதி செய்வதை குறைக்கும். மேலும் இது உள்நாட்டில் தங்கம் விலையை குறைக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+