டெல்லி: நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் மே மாதத்தில் ரூ.1.73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இது உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் அதிகரிப்பால் சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்று நிதி அமைச்சகம் சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, மே மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி (GST) வரி வசூல் 10 % உயர்ந்து ரூ.1.73 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த மாதம் ரூ.2.10 லட்சம் கோடியை எட்டியது. இது, நாட்டின் வலுவான பொருளாதார செயல்பாட்டைக் குறிக்கிறது.

ஜிஎஸ்டி வசூல் சாதனைக்கான காரணிகள்:
உள்நாட்டு விற்பனை அதிகரிப்பு: மே மாதத்தில் உள்நாட்டு விற்பனை 15.3 % அதிகரித்துள்ளது, இது ஜிஎஸ்டி வரி வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறக்குமதி சரிவு: அதே சமயம், இறக்குமதி 4.3 % குறைந்துள்ளது, இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஓரளவு பாதிக்கப்பட்டது.
ரீஃபண்டுகளைக் கணக்கிட்ட பிறகு, மே 2024ஆம் ஆண்டுக்கான நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.44 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.9 சதவீத வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறது.
மே 2024 வரை கணக்கிடப்பட 2025ஆம் நிதியாண்டுக்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 3.83 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 11.3 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது. இது உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வலுவான அதிகரிப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மே மாதத்தில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) ரூ. 32,409 கோடியாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ரூ. 40,265 கோடியாகவும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) ரூ. 39,879 கோடியாக உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலாக ரூ 1,076 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில், செஸ் வசூல் ரூ. 12,284 கோடியாக உள்ளது.
மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 2 லட்சம் கோடியைத் தாண்டியது.
ஜிஎஸ்டி வரி வசூலில் ஏற்பட்டுள்ள இந்த நிலையான உயர்வு, இந்தியப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் வரும் காலங்களில் வரி வருவாயை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications