ஜனவரி முதல் புதிய மாற்றம்.. முக ஸ்டாலின் அரசின் மெகா அறிவிப்பு.. ரூ.12000 சொளையா வரப்போகுது..!!

பெண்கள் முன்னேற்றத்தில் அதிகப்படியான கவனம் செலுத்தும் மாநிலமாக தமிழ்நாடு, நாட்டிலேயே தனித்து விளங்குகிறது. இந்த நிலையில் தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக வழங்கும் திட்டத்தில் முக்கியமான மாற்றம் கொண்ட வர உள்ளது முக.ஸ்டாலின் அரசு.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து குடும்ப தலைவிக்கும் புதிய நிதி பலத்தை கொடுத்துள்ளது.

ஜனவரி முதல் புதிய மாற்றம்.. முக ஸ்டாலின் அரசின் மெகா அறிவிப்பு.. ரூ.12000 சொளையா வரப்போகுது..!!

இதுவரை 1.62 கோடி பெண்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் இந்தத் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த புதிய முடிவின் மூலம் தமிழகத்தில் உள்ள பெண்களின் பொருளாதார நிலை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் தமிழக அரசின் பெண்களின் நலன் சார்ந்த முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தை முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. இந்த நிதியுதவி திட்டம் பெண்களின் சுய உதவித் திறனை அதிகரித்து, அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும். மேலும், குடும்ப வருமானத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்து, குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கு நிதி உதவி பெற முடியும். இது பெண்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தி, சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும். இலவச பஸ் வசதி மூலம் தற்போது அதிகப்படியான பெண்கள் வேலைக்கு செல்ல துவங்கியது மூலம் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு குறியீட்டில் பெண்களின் பங்கீடு அதிகரித்துள்ளது.

இந்த புதிய மாற்றம் குறித்து பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என கருத்துக்கள் நிலவுகிறது. திமுக கட்சியின் தேர்தலில் வெற்றி பெற்று சில மாதங்களுக்கு முன்பு தான் இத்திட்டத்தை செயல்முறைக்கு கொண்டு வந்தது.

2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டம் சில குறிப்பிட்ட தகுதிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையிலான பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. பின்னாளில் கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்போது 1.62 கோடி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதிம் வருடத்திற்கு 12000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜனவரி 2025 முதல் அனைத்து குடும்ப தலைவிக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+