பெண்கள் முன்னேற்றத்தில் அதிகப்படியான கவனம் செலுத்தும் மாநிலமாக தமிழ்நாடு, நாட்டிலேயே தனித்து விளங்குகிறது. இந்த நிலையில் தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக வழங்கும் திட்டத்தில் முக்கியமான மாற்றம் கொண்ட வர உள்ளது முக.ஸ்டாலின் அரசு.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து குடும்ப தலைவிக்கும் புதிய நிதி பலத்தை கொடுத்துள்ளது.

இதுவரை 1.62 கோடி பெண்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் இந்தத் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த புதிய முடிவின் மூலம் தமிழகத்தில் உள்ள பெண்களின் பொருளாதார நிலை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் தமிழக அரசின் பெண்களின் நலன் சார்ந்த முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தை முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. இந்த நிதியுதவி திட்டம் பெண்களின் சுய உதவித் திறனை அதிகரித்து, அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும். மேலும், குடும்ப வருமானத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்து, குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கு நிதி உதவி பெற முடியும். இது பெண்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தி, சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும். இலவச பஸ் வசதி மூலம் தற்போது அதிகப்படியான பெண்கள் வேலைக்கு செல்ல துவங்கியது மூலம் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு குறியீட்டில் பெண்களின் பங்கீடு அதிகரித்துள்ளது.
இந்த புதிய மாற்றம் குறித்து பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என கருத்துக்கள் நிலவுகிறது. திமுக கட்சியின் தேர்தலில் வெற்றி பெற்று சில மாதங்களுக்கு முன்பு தான் இத்திட்டத்தை செயல்முறைக்கு கொண்டு வந்தது.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டம் சில குறிப்பிட்ட தகுதிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையிலான பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. பின்னாளில் கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்போது 1.62 கோடி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதிம் வருடத்திற்கு 12000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜனவரி 2025 முதல் அனைத்து குடும்ப தலைவிக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

திருப்பூர், கரூர், ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சல்யூட்!! அமெரிக்க வரி பிரச்சினைக்கு மத்தியிலும் சாதனை!!

பாஜக அரசின் தவறான முடிவுகளே LPG சிலிண்டர் பற்றாக்குறைக்கு காரணம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி..!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications