பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குப் பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சனை மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ள வேளையிலும், அரசு நிறுவனங்களை விற்பனை செய்து தனியார்மயமாக்கல் திட்டத்தில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே மோடி அரசு, நாட்டின் எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்க முடிவு செய்தது.
இந்தத் திட்டத்தைச் சிறப்பாக நடந்த எண்ணெய் நிறுவனங்களில் 100 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது ஒன்றிய அரசு.
100 சதவீதம் அன்னிய முதலீடு
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களில் ஆட்டோமேட்டிங் ரூட்டில் 100 சதவீதம் அன்னிய முதலீடு செய்யும் உரிமையை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த அனுமதி மூலம் மத்திய அரசு பார்த் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை வெற்றிகரமான விற்பனை செய்து முடிக்க முடியும் என நம்புகிறது.
கச்சா எண்ணெய் நிறுவனம்
இதற்கு முன்பு கச்சா எண்ணெய் நிறுவனத்தில் குறிப்பாக அரசுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் நிறுவனத்தில் அதிகப்படியாக 49 சதவீதம் பங்குகளை மட்டுமே ஒரு வெளிநாட்டு நிறுவனம் கைப்பற்ற முடியும். ஆனால் தற்போது 100 சதவீதம் பங்குகளையும் முதலீடு செய்து கைப்பற்ற முடியும்.
அரசு ஆணை
இந்த 100 சதவீத அன்னிய முதலீட்டு அனுமதியை அரசு ஆணையாகவே மத்திய அரசு வெளியிட்டுள்ள காரணத்தால், சட்டப்பூர்வமான மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன்
மேலும் பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் முதலீடு செய்து கைப்பற்ற அனில் அகர்வால்-ன் வேதாந்தா, அப்போலோ மேனேஜ்மெண்ட், திங்க் கேஸ் ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் விருப்பம் தெரிவித்துள்ளது.
52.98% BPCL பங்குகள்
பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தைத் தனியார்மயமாக்குதல் திட்டத்தின் மூலம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 52.98 சதவீத பங்குகளை மொத்தமாகக் கைப்பற்றி, இந்தப் பங்குகளைக் கைப்பற்றும் நிறுவனம் நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வர முடியும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications