இந்தியாவில் பருவமழை அதிகமாக இருந்தாலும் தேவையான பகுதியில் குறைவாகவும், தேவையில்லாத பகுதியில் கூடுதலாகவும் இருக்கிறது, இதனால் விவாச உற்பத்தி அளவு நாடு முழுவதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மோடி அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மத்திய அமைச்சரவை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான 1.5 சதவீத வட்டி மானியத்தை விவசாயிகளுக்கு அளிக்கப்படும் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
1.5 சதவீத வட்டி மானியம்
2022-23 முதல் 2024-25 நிதியாண்டுக்குப் பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், சிறு நிதி வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட பிஏசிஎஸ் உள்ளிட்ட கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
3 லட்சம் ரூபாய் வரை கடன்
விவசாயிகளுக்கு அளிக்கப்படும் 3 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 1.5 சதவீத வட்டி மானியத்திற்கு இந்தக் காலகட்டத்திற்கு மத்திய அரசுக்குக் கூடுதலாக ரூ.34,856 கோடி பட்ஜெட் ஒதுக்கீடுகள் தேவைப்படும் அல்லது கூடுதல் சுமை உருவாகும்.
பணப்புழக்கம்
விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடன்களுக்கு வட்டி மானியத்தை அதிகரிப்பதன் மூலம் விவசாயத் துறையில் பணப்புழக்கம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் இத்துறையில் கடன் வழங்கும் நிறுவனங்களின் நிதி ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் என்று மத்திய அரசு கூறியது.
வேலைவாய்ப்பு
விவசாயிகளுக்குக் குறுகிய காலத்திற்குக் கடன் வழங்க ஊக்குவிக்கப்படுவதன் மூலம் கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, கோழி வளர்ப்பு மற்றும் மீன் பிடி உள்ளிட்ட அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் குறுகிய கால விவசாயக் கடன்கள் வழங்கப்படுவதால், இந்தத் திட்டம் இத்துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும்.
4 சதவீத வட்டி
கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும்போது, விவசாயிகள் 4 சதவீத வட்டி விகிதத்தில் குறுகிய கால விவசாயக் கடனைப் பெறுவார்கள். கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு மலிவு விலையில் சிரமமின்றிக் கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications