இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சேவை துறையை அதிகளவில் நம்பியிருக்கும் நிலையில், சீனா போல் இந்தியாவும் ஏற்றுமதி அடிப்படையிலான வர்த்தகச் சந்தையை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு பல ஆண்டுகளாக அறிவித்து வருகிறது.
இதேபோல் கடந்த சில வருடங்களில் சீனாவில் இருந்து வெளியேறிய பல நிறுவனங்களை அண்டை நாடுகளுக்குச் சென்றாலும், குறிப்பிடத்தக்க அளவிலான நிறுவனங்களை இந்தியா ஈர்த்துள்ளது. இதேபோல் இந்தியாவில் இருக்கும் பல நிறுவனங்கள் புதிய உற்பத்தி தளத்தை உருவாக்கியுள்ளது.
இதனால் இந்தியாவில் உற்பத்தி அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் ஏற்றுமதி அளவும் அதிகரித்து வருகிறது.
ஏற்றுமதி
இந்தியாவின் ஏற்றுமதி அளவு பிப்ரவரி மாதம் 22.36 சதவீதம் அதிகரித்துச் சுமார் 33.81 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் இன்ஜினியரிங், பெட்ரோலியம், கெமிக்கல் ஆகியவை டாப் 3 இடத்தைப் பிடித்துள்ளது.
தொடர் உயர்வு
இந்தியாவின் மொத்த ஏற்றுமதி அளவு ஏப்ரல் 2021ல் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் 2021ல் ஏற்றுமதி அளவு 195.7 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 69.35%, 48%, 49%, 45%, 22%, என ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
இறக்குமதி
இந்தியாவில் ஏற்றுமதி ஒருபக்கம் பெரிய அளவில் அதிகரித்தாலும் இறக்குமதியும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் இந்தியாவின் மொத்த இறக்குமதி அளவு 34.9 சதவீதம் அதிகரித்து 55 பில்லியன் டாலராக உள்ளது.
கச்சா எண்ணெய்
பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மட்டும் 66.56 சதவீதம் அதிகரித்து மொத்த இறக்குமதி அளவில் 15 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 13.12 பில்லியன் டாலார உயர்ந்துள்ளது.
தங்கம் இறக்குமதி
தற்போது கொரோனா தொற்றின் 3வது அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. இவ்விரண்டின் இறக்குமதி அதிகரிப்புக்கு ரஷ்யா - உக்ரைன் போரும் முக்கியக் காரணமாக உள்ளது.
மோடி அரசின் கனவு
மோடி அரசின் கனவை நினைவாக்கும் வகையில் ஏற்றுமதி அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சி தான், ஆனால் வர்த்தகம் பற்றாக்குறையும் தொடர்ந்து அதிகரிப்பது நாணய மதிப்பு மற்றும் நிதி நிலையைப் பாதிக்கும். இந்தியாவின் ஏற்றுமதி அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதன் வாயிலாக இந்த ஆண்டு 400 பில்லியன் டாலரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications