அரிசி மீது புதிய வரி விதிக்கும் மத்திய அரசு.. ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள்..!

பருவமழையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்பை உணவு பொருட்கள் உற்பத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதனால் காய்கறி, பழங்கள் தாண்டி அடிப்படை உணவாக இருக்கும் பருப்பு, அரிசி, கோதுமை ஆகியவற்றின் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் உக்ரைன், ரஷ்யா மத்தியிலான போர் மூலம் இவ்விரு நாடுகளின் உணவு பொருட்கள் உற்பத்தியும், ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டும், பல நேரத்தில் தடை பெற்றும் உள்ளது. இதனால் உலக நாடுகள் அரிசிக்காக இந்தியாவை நம்பியிருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அரிசி மீது புதிய வரி விதிக்கும் மத்திய அரசு.. ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள்..!

இந்த நிலையில் மத்திய அரசு பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசியின் ஏற்றுமதிக்கான வரிக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டிக்கவும், பாசுமதி அரிசி வகைகளுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) நிர்ணயம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரிசி விவசாயிகளுக்கு ஜாக்பாட் ஆக விளங்கும், இதேபோல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி கட்டுப்படுத்தப்படும்.

உலகின் பெரும்பாலான மக்களின் பிரதான உணவாக இருக்கும் அரிசியின் (பாசுமதி அல்லாத அரசிக்கு) ஏற்றுமதிக்கு இந்தியா சில வாரங்களுக்கு முன் தடை விதித்த நிலையில் அரிசி விலை பெரிய அளவில் உயர்ந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பாசுமதி அரிசிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) நிர்ணயம் செய்ய திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு.

பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிக்க அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. அதே நேரத்தில் பாஸ்மதி அரிசிக்கு ஒரு டன்னுக்கு சுமார் 1,250 டாலர் என குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) விதிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அரிசி விலை ஆகஸ்ட் 2022ல் ஒரு கிலோ 37.4 ரூபாய்க்கு ரீடைல் சந்தையில் விற்கப்பட்ட நிலையில், தற்போது (ஆகஸ்ட் 2023) 41.4 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் புழுங்கல் அரிசி ஏற்றுமதி 2.6 மில்லியன் டன்னாக இருந்தது, 2023 ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 3.1 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

இதேபோல் பாசுமதி அரசியின் ஏற்றுமதி அளவு ஏப்ரல் - ஜூன் காலக்கட்டத்தில் 1.1 மில்லியன் டன்னில் இருந்து 1.2 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. பாசுமதி அரிசி மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (MEP) இதற்கு முன்பு 2011 ஆம் நிதியாண்டில் நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+