மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள்களைத் தரும் நோக்கத்தில் பாரத் ஆட்டா என்று கோதுமையையும், பாரத் அரிசியையும் மத்திய அரசு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விநியோகம் செய்தது.
இதைத் தொடர்ந்து இப்போது பாரத் மசூர் பருப்பை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த பருப்பின் விலை ஒரு கிலோ ரூ.89 ஆகும். இதற்கு தள்ளுபடிகளெல்லாம் கிடையாது. மார்க்கெட்டில் என்ன விலையோ அதேதான் இதற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பாரத் பிராண்டுகள் கணிசமான தள்ளுபடி விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டது. விலைவாசி கட்டுக்குள் இருந்து வருகிறது. அத்துடன் அரசு கிட்டங்கிகளில் எக்கச்சக்கமான பருப்பு தேங்கியுள்ளது. இந்த நிலையில் பாரத் பருப்பின் விலை சந்தைக்கு நிகராக பிரதமர் நரேந்திர மோடி அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று மசூர் பருப்பின் அகில இந்திய சராசரி சில்லறை விலை ரூ.93.5 ஆக இருந்தது. முதல் கட்டத்தில், NAFED (National Agricultural Cooperative Marketing Federation of India Ltd) மற்றும் NCCF (National Cooperative Consumers' Federation of India Limited) ஆகியவை 25,000 டன் பருப்பை பதப்படுத்தி பேக் செய்து நாடு முழுவதும் கேந்திரிய மையங்கள் மூலம் விநியோகிக்கப்படும்.
விற்பனை நடைமுறைகள் தயாரானதும் மார்ச் முதல் வாரத்தில் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மசூர் பருப்பு விலை அதிகமாக இல்லாவிட்டாலும் கூடையை பெரிதாக்குவதற்காக 'பாரத்' பிராண்டின் கீழ் விற்க முடிவு செய்துள்ளோம். எனவே, தள்ளுபடி விலையில் மசூர் பருப்பை வழங்க மாட்டோம். கிட்டத்தட்ட மார்க்கெட் பீஸ் விலையில் ஒரு கிலோ ₹89 ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளோம்.
எங்கள் கிட்டங்கிகளில் சுமார் 720,000 டன் மசூர் பருப்பு உள்ளது.
கடந்த காலண்டர் ஆண்டில், இந்தியா சுமார் 3.1 மில்லியன் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்தது. அதில் பாதி மசூர், பெரும்பாலும் கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தது.
பாரத் மசூர் பருப்பு 1 கிலோ பாக்கெட்களில் கிடைக்கும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சில்லறை விற்பனை தலையீட்டின் ஒரு பகுதியாக, அரசாங்கம் NAFED, NCCF மற்றும் Kendriya Bhandar மூலம் பாரத் அரிசியை ஒரு கிலோ ₹29க்கும், பாரத் அட்டாவை ஒரு கிலோ ₹27.50க்கும், பாரத் சென்னா பருப்பு (கொண்டைக்கடலை) ₹60க்கும் விற்பனை செய்கிறது.
மொபைல் வேன்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் உட்பட சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 8,000-9,000 இலிருந்து கிட்டத்தட்ட 18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னதாக தெரிவித்தார்.
செய்தித் தொடர்பாளர் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு பத்திரிகை நேரத்தில் பதிலளிக்கப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு தனது சுதந்திர தின உரையில், இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக உறுதிமொழி அளித்தார்.
ஜனவரியில், மொத்த நுகர்வோர் விலைக் கூடையில் பாதியை உள்ளடக்கிய உணவுப் பணவீக்கம் 8.30% ஆக இருந்தது, 2023 டிசம்பரில் 9.53% ஆக இருந்தது.

புதனன்று, அகில இந்திய சில்லறை விற்பனை மட்டத்தில் மசூர் பருப்பு விலை கடந்த மாதத்துடன் சமமாக இருந்தது. ஆனால் ஒரு வருடத்துக்கு முன்பு இருந்ததை விட 0.8% குறைவாக இருந்தது என்று நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு வகையில், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நுகர்வோர் விலைகளைக் குறைக்கவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உணவு மானியம் என்று அழைக்கப்படுவதன் கீழ் உள்ளடக்கப்படும். இருந்தபோதிலும், தற்போதுள்ள பணவீக்க தரவு அரிசியில் 13% அதிகரிப்பைக் காட்டுகிறது.
Story Written by: I. Jayachandran
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications