இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக அனைத்து விற்பனைகளிலும் வாடிக்கையாளர்கள் பில்களைக் கேட்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 'மேரா பில் மேரா அதிகார்' திட்டத்தை தொடங்க உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு காலாண்டிற்கும் தலா ரூ.1 கோடி வீதம் இரண்டு பம்பர் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் 1 முதல் 12 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் தொடங்கப்படும்.

ஒவ்வொரு மாதமும், 800 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஜிஎஸ்டி பில்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து தலா ரூ.10,000 மதிப்புள்ள பரிசு வழங்கப்பட உள்ளது, இதோடு மற்றொரு பிரிவில் தலா 10 பேருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பம்பர் பரிசாக, காலாண்டு அடிப்படையில் அப்லோடு செய்யப்பட்ட ஜிஎஸ்டி பில்களில் குலுக்கல் செய்யப்பட்டு ஒவ்வொரு காலாண்டிற்கும் தலா ரூ.1 கோடி வீதம் இரண்டு பம்பர் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த பரிசு அனைத்தும் மக்கள் அனைத்து பொருட்களை வாங்கும்போது அதற்கான பில் கேட்டு பெற வேண்டும் என்பது தான்.
முதல்கட்டமாக அசாம், குஜராத், ஹரியானா மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்கள் பிரிவில் புதுச்சேரி, தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய பகுதிகளிலும் 'மேரா பில் மேரா அதிகார்' திட்டம் தொடங்கப்படும்.
ஒவ்வொரு மாதம் 5 ஆம் தேதிக்குள் பதிவேற்றப்பட்ட முந்தைய மாதத்தில் வழங்கப்பட்ட அனைத்து B2C பில்களும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதிபெறும். இந்த கால அளவீட்டில் தான் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 'மேரா பில் மேரா அதிகார்' திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இன்வாய்ஸ் அதாவது பில் பதிவேற்றும் போது, குலுக்கல் போட்டியில் பங்கேற்பவர்கள் சப்ளையர்-ன் GSTIN எண், பில் எண், பில் தேதி, பில் மதிப்பு மற்றும் வாடிக்கையாளரின் மாநிலம்/UT ஆகியவற்றை வழங்க வேண்டும்.
மேலும் குலுக்கலில் வெற்றி பெறுபவர்கள், பான் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற சில கூடுதல் தகவல்களை ஆப் அல்லது இணையத்தளத்தின் மூலம் அப்லோடு செய்ய வேண்டும். வெற்றியாளர்கள் என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த தகவல்கள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார், இதனால் வெற்றிபெறும் தொகையை மாற்ற முடியும்.
GST பதிவு செய்யப்பட்ட அனைத்து சப்ளையர் வழங்கிய பில்களும் இந்த சிறப்பு குலுக்குக்கு தகுதி பெறும் ஆனால், ஆனால் குறைந்தபட்ச பில் மதிப்பு ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு மாதத்தில் அதிகபட்சம் 25 இன்வாய்ஸ்களை ஒருவர் பதிவேற்றலாம். ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் கிடைக்கும் 'மேரா பில் மேரா அதிகார்' என்ற மொபைல் செயலியிலும், 'web.merabill.gst.gov.in' என்ற இணைய போர்ட்டலிலும் இன்வாய்ஸ்களை பதிவேற்றலாம்.
More From GoodReturns

மோடியின் திடீர் அவசர CCS கூட்டம்.. எதற்காக ஞாயிற்றுக்கிழமை மீட்டிங்..? என்ன நடந்தது..?!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு



Click it and Unblock the Notifications