பங்குச் சந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வருவதால், ப்ளூசிப் பங்குகள் உள்பட பல முன்னணி நிறுவன பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளன. இந்த சூழ்நிலையில், தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்பான தனது மதிப்பீட்டை வெளியிட்டதையடுத்து, நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1 சதவீதம் உயர்ந்தது. ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பேட்டரி லிமிடெட் நிறுவனம், பேட்டரி ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளதை மோர்கன் ஸ்டான்லி குறிப்பிட்டுள்ளது.
தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு தொடர்ந்து "overweight"ஆக உள்ளது என்றும், இப்பங்கின் இலக்கு விலையை ரூ.1,606ஆகவும் நிர்ணயம் செய்துள்ளது. அதாவது இப்பங்கு கடந்த புதன்கிழமை வர்த்தக முடிவு அளவை காட்டிலும் 30 சதவீதம் உயருவதற்கு சாத்தியம் உள்ளது என்பதை இது குறிப்பிடுகிறது. கடந்த புதன்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ.1,226.95ஆக இருந்தது.

"overweight" பங்கு என்பது, ஆய்வாளர்கள் முதலீட்டாளர்கள் அதிகமாக வாங்க பரிந்துரைக்கும் ஒரு பங்காகும். ஏனென்றால் அந்த பங்கு அதன் பிரிவில் உள்ள மற்ற பங்குகளை விட அல்லது ஒரு அளவுகோலை விட சிறப்பாக செயல்படும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பற்றிய தகவல்களை வழங்கும் 38 ஆய்வாளர்களில், 34 பேர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கை வாங்கலாம் தெரிவித்துள்ளனர். அதேசமயம் 3 ஆய்வாளர்கள் விற்பனை செய்யலாம் என்று கணித்துள்ளனர். ஒருவர் பங்கை தக்கவைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 0.36 சதவீதம் உயர்ந்து ரூ.1,237.45ஆக இருந்தது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தகவல் தொடர்பு முதல் எரிபொருள் வரையிலான பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் பேட்டரி தயாரிப்பிலும் களம் இறங்குகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்துக்கு சொந்தமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பேட்டரி லிமிடெட் நிறுவனம், பேட்டரி ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமான பிஎல்ஐ திட்டத்தின்கீழ், இந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பேட்டரி லிமிடெட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்நிறுவனம் 10 Gwh திறன் கொண்ட பேட்டரி உற்பத்தி ஆலையை தொடங்குவதுடன், பேட்டரிகளுக்கான நவீன ரசாயன செல்களை தயாரிக்க உள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications