ஈரான் போர் நிலவரத்திற்கு ஏற்ப தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவ தாக்குதலை தொடங்கின, பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் போரால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது. அதாவது கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க டாலர் வலுவடைந்து முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து டாலர் மற்றும் கச்சா எண்ணெயை நோக்கி சென்றுவிட்டனர். இதனால் தான் போர் சூழலுக்கு மத்தியிலும் தங்கம் விலை குறைந்தது.

இந்நிலையில் இன்று காலையில் குறைந்த தங்கம் விலை இன்று மாலை திடீரென உயர்ந்து விட்டது. அதுக்கு என்ன காரணம் நாளைய தினம் தங்கத்தின் விலை என்ன ஆகும் என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்துகொள்ளலாம். நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று காலை 340 ரூபாய் விலை குறைந்து 13,000 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்று காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் உயர்ந்த விட்டது. சென்னையில் தற்போது ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,04,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலையில் அது 1,06,000 ரூபாயாக விலை உயர்ந்திருக்கிறது. அதாவது இன்று காலை உடன் ஒப்பிடும்போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியும் விலையும் மாற்றம் அடைந்து இருக்கிறது. நேற்று 250 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று காலை 10 ரூபாய் விலை குறைந்து 240 ரூபாயாக மாறியது. தற்போது மீண்டும் 10 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 ,50,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இன்று காலை சரிவடைந்து தங்கம், வெள்ளி விலை மாலையில் திடீரென உயர்ந்ததற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. இவை தான் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை போக்கை நிர்ணயம் செய்யப் போகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் ஐந்து நாட்கள் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாகவும் நேற்று கூறினார். இதனை ஈரான் மறுத்திருந்தது.
இந்த சூழலில் இன்றைய தினம் ஈரானின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அயத்துல்லா அலி கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என கூறியதாக அல் அரேபியா ஊடகம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி வெளியான உடனேயே உலக அளவில் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன.
குறிப்பாக இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. அதாவது ஈரான் போர் ஒரு முடிவை நோக்கி செல்வதற்கான சாதகமான அறிகுறிகள் தென்பட்டு இருப்பதால் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை கச்சா எண்ணெயில் இருந்து எடுத்து பங்குச் சந்தைகளிலும், தங்கத்திலும் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர் இதுதான் தங்கம் வெள்ளி விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது.
இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தை நோக்கி நகர்கிறது என்றால் வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை குறையும் , பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலை உயரும். ஒருவேளை அதற்கு மாறாக தாக்குதல் தீவிரமடைகிறது கச்சா எண்ணெய் விலை உயரும் , பங்குச் சந்தைகளும் , தங்கம் விலையும் குறையும். நாளைய தினம் தங்கம் வெள்ளி விலை என்ன ஆகப்போகிறது என்பது அமெரிக்கா அதிபர் டிரம்பும், ஈரான் நாட்டு அரசும் இன்று நள்ளிரவுக்குள் எடுக்க போகும் முடிவுகளே தீர்மானிக்கும்.
இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் 10 கிராம் தங்கம் விலை 140800 ரூபாய் என விலை உயர்ந்தது, இது காலை வர்த்தகம் தொடங்கும் போது 1,38,411 ரூபாயாக தான் இருந்தது. வர்த்தகம் முடியும் போது தங்கம் விலை உயர்ந்திருந்தது. அதே போல ஸ்பாட் கோல்டு விலையும் ஒரு அவுன்ஸ் 5 டாலர் உயர்ந்து 4,409 டாலராக இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications

