ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திர கூட்டத்தின் முடிவில் முகேஷ் அம்பானி பேசுகையில், அடுத்த 5 வருடத்திற்கு ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக தொடர உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் முகேஷ் அம்பானி தனது 71 வயது வரையில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் உயர் பதவியில் இருக்கப்போவதாக தெரிவித்தார்.
இந்த 5 வருட காலத்தில் தனக்கு 3 முக்கிய பொறுப்புகள் இருப்பதாகவும் கூறினார் முகேஷ் அம்பானி. காரணம் 70 வயதுக்கு மேல் நிர்வாக பொறுப்பிலும், நிர்வாக குழுவிலும் பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்ட நிறுவனத்தில் இருக்க முடியாது. இதன் மூலம் அடுத்த 5 வருடத்தில் தன்னுடைய பொறுப்பை பட்டியலிட்டு உள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் முகேஷ் அம்பானி வாரிசுகளும், டெலிகாம், ரீடைல், நியூ எனர்ஜி பிரிவின் தலைவர்களான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோர் Board of Directors ஆக நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் அடுத்த 5 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அனைத்து துறையிலும், அனைத்து பிரிவுகளிலும் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்குவது தான். அடுத்த தலைமுறை தலைவர்களை வைத்து நிறுவனத்தின் வளர்ச்சி பாதையை தீர்மானிப்பது முதல் பொறுப்பாகும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
2வதாக அனைத்து விஷயங்களிலும் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோரை வழிநடத்தி மென்டார்ஷிப் அளிப்பது தான். ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தலைவராக இருக்கிறார், ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் தலைவராக உள்ளார், அனந்த் அம்பானி நியூ எனர்ஜி பிரிவை நிர்வாகம் செய்து வருகிறார்.
3வதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மட்டுமே இருக்கும் தனிப்பட்ட நிர்வாக கலாச்சாரத்தை மேம்படுத்துவது என கூறுகிறார் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நேரடி நிர்வாகத்தில் முகேஷ் அம்பானி இருக்க போகும் கடைசி 5 வருடம் என்பதால் இது அவருடைய வாரிசுகளுக்கும், பங்கு முதலீட்டாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது. எனவே அடுத்த 5 வருடம் முகேஷ் அம்பானி உருவாக்கும் வளர்ச்சி பாதை தான் அடுத்த 15 வருடம் அவருடைய வாரிசுகள் பயணிக்க உள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications