மும்பை: ரூ.20 கோடி தாங்க இல்லையென்றால் உங்களை சுட்டு கொன்று விடுவோம் என்று இமெயில் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் மெகா கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். அம்பானி குடும்பத்தினருக்கு எதிராக அச்சுறுத்தல் உள்ளதே இதற்கு காரணம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவரது வீட்டுக்கு அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ கார் ஒன்று நின்றிருந்தது. ஆனால் நல்ல வேளையாக வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. அதேசமயம் இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று முகேஷ் அம்பானிக்கு ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளது. முகேஷ் அம்பானிக்கு மர்ம நபர்கள் இமெயில் மூலம் விடுத்துள்ள கொலை மிரட்டலில், ரூ.20 கோடி தர வேண்டும் தர தவறினால் சுட்டு கொன்று விடுவோம் என்று அச்சுறுத்தியுள்ளனர். இதனையடுத்து முகேஷ் அம்பானி தரப்பு இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர். மும்பை காம்தேவி காவல்நிலைய போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு ஐ.பி.சி. 387 மற்றும் 506 (2) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு இமெயில் வாயிலாக விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சி.ஆர்.பி..எஃப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைதான் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
முதலில் அம்பானி குடும்பத்துக்கு இசட் பிரிவு பாதுகாப்புதான் வழங்கப்பட்டது. ஆனால் அம்பானி குடும்பத்துக்கு எதிராக அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்தது. இதனையடுத்து அம்பானி குடும்பத்துக்கான பாதுகாப்பு இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பாக உயர்த்தப்பட்டது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications