கொரோனா வைரஸ், தற்போது சும்மா இருந்த லே ஆஃப் பூதத்தை சொரிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
பல கம்பெனிகள், தங்கள் ஊழியர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாமல் லே ஆஃப் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் அதிகம் சிக்கி இருப்பவர்கள் ஐடி கம்பெனி ஊழியர்கள் தான்.
வழக்கம் போல, ஐடி துறையில் இந்த கொரோன வைரஸ் கொஞ்சம் அதிகமாக பிரச்சனைகளையே ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பிரச்சனைகளை சமாளிக்க நாஸ்காம் சில கோரிக்கைகளை நிதி அமைச்சகத்திடம் வைத்திருக்கிறது.
கோரிக்கைகள்
இந்த 2020 - 21 நிதி ஆண்டில் கட்டாயம் போனஸ் தருவதில் இருந்து விலக்கு அளிக்கச் சொல்லி அனுமதி கோரி இருப்பது, Work from Home செலவுகளை வியாபார செலவுகளாக கணக்கில் எடுத்துக் கொள்ள அனுமதி கோரி இருப்பது, Paid leave-க்கு கொடுக்கும் சம்பளத்தை திருப்பி கொடுக்கச் சொல்லி அரசிடம் கேட்டு இருப்பது... என பல கோரிக்கைகளை வைத்திருக்கிறது நாஸ்காம்.
கார்ப்பரேட் வரி
அதோடு, 2020 - 21 நிதி ஆண்டுக்கான கார்ப்பரேட் வரியை 22 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக குறைக்கச் சொல்லி இருக்கிறது நாஸ்காம். இந்த இக்கட்டான சூழலில் வரிச் சுமைகளைக் குறைந்தால், கம்பெனிகள் தங்கள் மற்ற செலவுகளைச் செய்ய வசதியாக இருக்கும் என்கிறார்கள் நஆஸ்காம் தரப்பினர்கள்.
ஜிஎஸ்டி
அதோடு fiber connectivity, broadband, cellular data, cloud services, laptops, computers தொடர்பாக ஐடி சேவைகளை வழங்குவது மற்றும் பொருட்களை விற்பதற்கு 18 சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ் டி) வசூலிக்கிறார்களாம். இதை 5 சதவிகிதமாக குறைக்கச் சொல்லிக் கேட்டு இருக்கிறது நாஸ்காம் தரப்பு.
பாக்கி தொகை
இது போல, கம்பெனிகள் கையில் காசு புழங்க (குறிப்பாக சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு), மத்திய மற்றும் மாநில அரசுகள், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் எல்லாம் கம்பெனிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகைகளை 15 நாட்களுக்குள் கொடுக்குமாறும் அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.
வரி ஒத்தி வைப்பு
அதோடு, வருமான வரித் துறையினருக்கு, முன் கூட்டி செலுத்தும் வரி (Advance Tax) தேதி, முதல் காலாண்டுக்கு, ஜூன் 15, 2020 ஆக இருக்கிறது. இந்த தேதியை ஒத்திப் போடுமாறும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள் ஐடி மற்றும் ஐடி சேவை சார்ந்த கம்பெனிகளின் கூட்டமைப்புச் சங்கமான நாஸ்காம். இதை எல்லாம், இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அரசு செய்யுமா? அரசுக்கு தான் வெளிச்சம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications