டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்தால்தான் நல்ல லாபம் பார்க்க முடியும் என்று சில முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சில பென்னி ஸ்டாக் பங்குகளில் முதலீடு செய்தாலும் நல்ல ஆதாயம் ஈட்ட முடியும்.
மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு பென்னி ஸ்டாக் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயம் அளித்துள்ளது. அந்த மல்டிபேக்கர் ஆதாயம் கொடுத்த நிறுவன பங்கு என்பிசிசி (இந்தியா). இந்த நிறுவன பங்குகள் உங்கள் வசம் இருக்கிறதா?. என்பிசிசி (இந்தியா) நிறுவனம் குறித்து சிறு தகவல் இதோ:

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா நிறுவனம் என்பிசிசி (இந்தியா) லிமிடெட். இந்நிறுவனம் சிவில் கட்டுமான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 6.55 சதவீத பங்கு மூலதனத்தை எல்ஐசி கொண்டுள்ளது.
இந்நிறுவனம் ரூ.55,000 கோடி மதிப்பிலான ஆர்டர்களை கொண்டுள்ளது. தற்போது உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தேசிய பேஷன் டெக்னாலஜி (என்ஐஎஃப்டி) வளாகத்தை நிர்மாணிப்பதற்கான ஒரு புதிய ஆர்டரை பெற்றுள்ளது. ரூ.218 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் தற்போதுள்ள வர்த்தக வசதி மையத்தை மாற்றியமைக்கும் பணிகளும் அடங்கும்.
மேலும், என்பிசிசி (இந்தியா) நிறுவனம் கான்பூரில் பிபிஎஸ் அரசு மருத்துவ கல்லூரியில் சோனேபட் திட்டத்தில் ரூ.134.13 கோடி செலவை அதிகரிப்பதற்கான நிர்வாக அனுமதியையும் பெற்றுள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து வர்த்தக ஆர்டர்களை பெற்று வருகிறது, அதேசமயம், இந்நிறுவனத்தின் நிதி நிலவரமும் மிக சிறப்பாக உள்ளது.
என்பிசிசி (இந்தியா) நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.6,736 கோடியும், நிகர லாபமாக ரூ.231.14 கோடியும் ஈட்டியுள்ளது. மேலும்,இந்நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.63.13 கோடியும், செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.85.27 கோடியும் ஈட்டியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் என்பிசிசி (இந்தியா) நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயம் அளித்துள்ளது. கணக்கீடு காலத்தில் இப்பங்கின் விலை 160 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே என்பிசிசி (இந்தியா) பங்கின் விலை ரூ.94.37ஐ தொட்டது.
இது இப்பங்கின் 52 வார புதிய உச்ச விலையாகும். கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2023 மார்ச் 28ம் தேதியன்று இப்பங்கின் விலை ரூ.30.96ஆக இருந்தது. தற்போது இப்பங்கின் விலை ரூ.91.77ஆக உள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications