இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி ஐபிஓ வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் நிலையில், தற்போதைய வர்த்தக கட்டமைப்பில் அனைத்து வர்த்தகமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் வேளையில் தனியாக பிரித்து ஐபிஓ வெளியிட்டால் பெரும் தடுமாற்றம் வரும் என்பதை உணர்ந்தார்.
இதை டெஸ்ட் செய்யும் வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தற்போது ஆரம்பக்கட்ட வளர்ச்சி பாதையில் இருக்கும் தனது நிதி சேவை பிரிவை தனியாக பிரித்து பங்குச்சந்தையில் பட்டியலிடும் முயற்சியில் உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தில் இருக்கும் நிதி சேவை பிரிவை தனியாக பிரிக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) ஒப்புதல் அளித்துள்ளது. NCLT ஜூன் 28 ஆம் தேதி ஒப்புதலை கொடுத்ததாகவும், அது ஜூலை 5 ஆம் தேதி NCLT அமைப்பின் இணையதளத்தில் அப்லோடு செய்யப்பட்டு உள்ளதாகவும் ரிலையன்ஸ் பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து தற்போது தனியாக பிரிக்கப்படும் நிறுவனத்தின் பெயர் Reliance Strategic Investments Ltd. இது மே மாதம் Jio Financial Services என பெயர் மாற்றப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் விரைவில் பிரிக்கப்பட்ட நிறுவனங்களின் பங்கு விநியோகம் மற்றும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நாள் ஆகியவை குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. Jio Financial Services நிறுவனம் NBFC பிரிவில் இயங்க போகிறது.

கடந்த மாதம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் கன்ஸ்யூமர் பைனான்ஸ் ப்ரோகிராம்-ன் சோதனை திட்டத்தை துவங்கியுள்ளது என்றும், இதை தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் பெரிய அளவில் செய்து வருகிறது என்றும் தகவல் வெளியானது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனியாக பிரிந்து பங்குச்சந்தையில் பட்டியலிடும் பட்சத்தில் இந்தியாவின் 5வது அதிக மதிப்புடைய நிறுவனமாக இருக்கும் என Macquarie கணித்துள்ளது. ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் வர்த்தகம் பஜாஜ் பைனான்ஸ்-ன் வர்த்தகத்தை அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications