சென்னை: இந்தியாவில் வங்கி விடுமுறைகள் மாநிலங்களுக்கிடையே பெரிய அளவில் மாறுபடுகின்றன. பிராந்திய திருவிழாக்கள் மற்றும் உள்ளூர் கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக வங்கிகள் மூடப்படுகிறது.
சில மாநிலங்கள் குறிப்பிட்ட விடுமுறைகளை கடைபிடிக்கும் போது, மற்ற மாநிலங்களில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். மேலும், அனைத்து வங்கிகளும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறையைக் கடைப்பிடிக்கின்றன. இந்த நிலையில் டிசம்பர் 31, 2024 மற்றும் ஜனவரி 1, 2025 வார நாட்களாக இருக்கும் வேளையில், வங்கிகள் செயல்படுமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

டிசம்பர் 31, 2024 வங்கி விடுமுறை: டிசம்பர் 31, 2024, செவ்வாய்க்கிழமை, மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் புத்தாண்டு / லாஸ்ஸாங் / நாம்சூங் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் வங்கிகள் மூடப்படும்.
ஜனவரி 1, 2025 வங்கி விடுமுறை: ஜனவரி 1, 2025 அன்று வங்கிகள் மூடப்படுமா என்பது குறித்து சில குழப்பங்கள் நிலவுகின்றன. இந்திய அரசின் தளத்தில் ஜனவரி 1-ம் தேதி அரசு விடுமுறை அல்ல, "வரையறுக்கப்பட்ட விடுமுறை" என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தெளிவின்மை, புத்தாண்டு முதல் நாளில் வங்கிகள் மூடப்படுமா என்பது குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது.
மாற்று வங்கி சேவைகள்: சில நாட்களில் வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், டிஜிட்டல் வங்கி சேவைகள் எளிதில் கிடைக்கும். நெட் பேங்கிங், மொபைல் வங்கி மற்றும் UPI தளங்கள் தொடர்ந்து செயல்பட்டு, பண பரிமாற்றம், பில் கட்டணம் மற்றும் ஆன்லைன் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள அனுமதிக்கின்றன. இருப்பினும், நீட்டிக்கப்பட்ட விடுமுறை காலங்களில் ஏடிஎம் பண இருப்பு பாதிக்கப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தடையற்ற டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்த, ஆன்லைன் வங்கி சேவைகளை செயல்படுத்தி, உங்கள் வங்கி கணக்கை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் OTP தேவைப்படும் காலத்திலும் எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications