இந்தியாவில் வரும் 22 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தம் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு பொருட்களின் விலை கணிசமான அளவு குறைய இருக்கிறது. நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தொடங்கி கார், இருசக்கர வாகனம் வரை பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளை மத்திய அரசு குறைத்து இருக்கிறது .
பால் விற்கும் நிறுவனம் தொடங்கி கார் விற்பனை செய்யும் நிறுவனம் வரை தங்களுடைய பொருட்கள் விலை குறைவு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கும் போது மக்களிடையே நுகர்வு போக்கும் அதிகரிக்கும் இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் இந்த ஆண்டு அந்த நுகர்வினை இன்னும் அதிகப்படுத்தும் என அரசு நம்புகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் பொதுமக்கள் கைகளில் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை தெரிவித்திருக்கிறார் .இதன் மூலம் மக்கள் அதிகமான பணத்தை செலவிடுவார்கள் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் ஊக்கம் தரும் எனக் கூறியிருக்கிறார்.
ஜிஎஸ்டி வரி திருத்தம் தொடர்பாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 12% வரியின் கீழ் இருந்த 99% பொருட்கள் 5% வரி விதிப்பின் கீழ் வந்துவிட்டன . இது மிடில் கிளாஸ் மற்றும் ஏழ்மை குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு மிகப்பெரிய பலனை தந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.

பொதுமக்கள் மீது இருக்கக்கூடிய வரி சுமையை குறைக்க வேண்டும் அதே வேளையில் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் ஆகிய இரண்டையும் நோக்கமாகக் கொண்டுதான் ஜிஎஸ்டி கவுன்சில் இந்த வரி சீர்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது என அப்போது நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் என்பது பொதுமக்களுக்கு பல மடங்கு லாபம் தரும் என்றும் பல்வேறு துறைகளுக்கும் பெரிய அளவில் ஊக்கம் தரும் என்றும் கூறியிருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு 7.19 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது அது 2025 ஆம் ஆண்டில் 22.08 லட்சம் கோடியாக அதிகரித்திருந்தது என குறிப்பிட்டு இருக்கும் அவர் இதே காலகட்டத்தில் இந்தியாவின் 65 லட்சமாக இருந்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது 1.51 கோடி என்ற அளவிற்கு உயர்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் அரசு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்ற வகையில் மாற்றம் கொண்டு வந்தது. தற்போது ஜிஎஸ்டி வரி திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இரண்டும் பொதுமக்கள் கைகளில் பெருமளவிலான பணப்புழக்கத்திற்கு வித்திடும் என அரசு நம்புகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications