பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ஒரு மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் நோக்கில், 2017 ஜூலை 1ம் தேதி சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தியது. தற்போது ஜிஎஸ்டி வாயிலாக மாதந்தோறும் சராசரியாக ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் வந்து கொண்டு இருக்கிறது. 2021 செப்டம்பரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான மற்றும் மாநில நிதியமைச்சர்கள் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில், ஜிஎஸ்டி விகிதங்களை மதிப்பாய்வு எளிமைப்படுத்தவும், வரி அடுக்குகளில் மாற்றங்களை பரிந்துரைக்கவும் ஒரு அமைச்சர்கள் குழுவை அமைத்தது. இந்த குழுவில் 6 மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சர்கள் குழு தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும் என்றும், வரி விகிதங்கள் மற்றும் அடுக்குகளை பகுத்தறிவு செய்யும் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2017 ஜூலை 1ம் தேதியன்று ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது வருவாய் நடுநிலை விகிதம் 15.8 சதவீதமாக இருந்தது. இது 2023ல் 11.4 சதவீதமாக குறைந்தள்ளது.

இது இன்னும் குறையும். வரி விகிதங்கள் மற்றும் அடுக்குகளை பகுத்தறிவு செய்யும் வேலை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. அமைச்சர்கள் குழு சிறப்பாக செயல்பட்டிருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆனால் ஒவ்வொரு குழுவின் பணிகளையும் மீண்டும் ஒரு முறை முழுமையாக பதிப்பாய்வு செய்து, இது குறித்து இறுதி முடிவுக்கு வர முடியுமா என்பதை பார்க்க கவுன்சிலுக்கு எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன்.
நாங்கள் அதை அடுத்த கவுன்சில் கூட்டத்துக்கு எடுத்துச் செல்வோம். மிக முக்கியமான சில பிரச்சினைகள், குறைப்பு, விகிதங்களை பகுத்தறிவு செய்தல், அடுக்குகளின் எண்ணிக்கையை பார்ப்பது போன்றவற்றில் இறுதி முடிவுக்கு வருவதற்கு நாங்கள் மிக அருகில உள்ளோம். மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் பொது மக்களின் பங்குகளை அதிகரிக்க உறுதி பூண்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் அதிக சில்லரை முதலீட்டாளர்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications