பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ஒரு மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் நோக்கில், 2017 ஜூலை 1ம் தேதி சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தியது. தற்போது ஜிஎஸ்டி வாயிலாக மாதந்தோறும் சராசரியாக ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் வந்து கொண்டு இருக்கிறது. 2021 செப்டம்பரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான மற்றும் மாநில நிதியமைச்சர்கள் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில், ஜிஎஸ்டி விகிதங்களை மதிப்பாய்வு எளிமைப்படுத்தவும், வரி அடுக்குகளில் மாற்றங்களை பரிந்துரைக்கவும் ஒரு அமைச்சர்கள் குழுவை அமைத்தது. இந்த குழுவில் 6 மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சர்கள் குழு தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும் என்றும், வரி விகிதங்கள் மற்றும் அடுக்குகளை பகுத்தறிவு செய்யும் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2017 ஜூலை 1ம் தேதியன்று ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது வருவாய் நடுநிலை விகிதம் 15.8 சதவீதமாக இருந்தது. இது 2023ல் 11.4 சதவீதமாக குறைந்தள்ளது.

இது இன்னும் குறையும். வரி விகிதங்கள் மற்றும் அடுக்குகளை பகுத்தறிவு செய்யும் வேலை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. அமைச்சர்கள் குழு சிறப்பாக செயல்பட்டிருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆனால் ஒவ்வொரு குழுவின் பணிகளையும் மீண்டும் ஒரு முறை முழுமையாக பதிப்பாய்வு செய்து, இது குறித்து இறுதி முடிவுக்கு வர முடியுமா என்பதை பார்க்க கவுன்சிலுக்கு எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன்.
நாங்கள் அதை அடுத்த கவுன்சில் கூட்டத்துக்கு எடுத்துச் செல்வோம். மிக முக்கியமான சில பிரச்சினைகள், குறைப்பு, விகிதங்களை பகுத்தறிவு செய்தல், அடுக்குகளின் எண்ணிக்கையை பார்ப்பது போன்றவற்றில் இறுதி முடிவுக்கு வருவதற்கு நாங்கள் மிக அருகில உள்ளோம். மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் பொது மக்களின் பங்குகளை அதிகரிக்க உறுதி பூண்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் அதிக சில்லரை முதலீட்டாளர்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications