GST வரி குறைப்பு: நாளை நடைபெறும் முக்கிய கூட்டம்.. இதுல மட்டும் ஓகே கிடைச்சா தீபாவளி பரிசு நிச்சயம்!

டெல்லி: ஜிஎஸ்டி வரிமுறையில் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில் அது தொடர்பான பணிகளையும் ஒருபுறம் தீவிரப்படுத்தி இருக்கிறது.

ஜிஎஸ்டி வரி :பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சுதந்திர தின உரையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இந்தியாவில் ஜிஎஸ்டி வரிமுறையில் பெரிய சீர்த்திருத்தம் கொண்டு வரப் போகிறோம், இதன் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலை குறைய போகிறது என்ற நற்செய்தியை வெளியிட்டார். இதனை அடுத்து மத்திய அரசு ஜிஎஸ்டி வரிமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை அளித்து இருக்கிறது.

GST வரி குறைப்பு: நாளை நடைபெறும் முக்கிய கூட்டம்.. இதுல மட்டும் ஓகே கிடைச்சா தீபாவளி பரிசு நிச்சயம்!

நாளை முக்கிய ஆலோசனை: 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அரசு தன்னுடைய பரிந்துரையில் குறிப்பிட்டு இருக்கிறது. இவ்வாறு ஜிஎஸ்டி வரிமுறையில் கொண்டு வரப்படக்கூடிய இந்த சீர்திருத்தம் பல்வேறு பொருட்களின் விலையை குறைக்க போகிறது. இந்த சூழலில் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆன நாளைய தினம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் Group of Ministers எனப்படும் அமைச்சர்களுக்கான குழுவினரை சந்தித்து பேச இருக்கிறார்.

நிதி அமைச்சர் பங்கேற்பு: இந்த கூட்டத்தில் மத்திய அரசு பரிந்துரைக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைக்க இருக்கிறார். ஜிஎஸ்டி வரி திருத்தம் தொடர்பாக இரண்டு நாட்களுக்கு குரூப் ஆஃப் மினிஸ்டர்ஸ் எனப்படும் அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெற இருக்கிறது. நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கும் இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது .

GST வரி குறைப்பு: நாளை நடைபெறும் முக்கிய கூட்டம்.. இதுல மட்டும் ஓகே கிடைச்சா தீபாவளி பரிசு நிச்சயம்!

2 நாட்கள் கூட்டம்: இந்த கூட்டத்தில் மத்திய அரசு அளித்திருக்கும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்த பரிந்துரை குறித்து முக்கியமான ஆலோசனை நடத்தப்படும். மத்திய அரசு கூறியபடி வரியை 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டாக மட்டுமே கொள்வது, புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பது மற்றும் காம்பன்சேஷன் செஸ் வரியை நீக்குவது, காப்பீடு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து முக்கிய முடிவு எடுப்பது என பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் இந்த இரண்டு நாட்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

முதன்முறையாக நிர்மலா சீதாராமன் பங்கேற்பு: பொதுவாக இந்த அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சருக்கு எந்த ஒரு பொறுப்பும் இல்லை அவர் உறுப்பினரும் இல்லை, ஆனால் அரசின் இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்திற்கான பின்னணி குறித்து எடுத்துரைப்பதற்காக முதன்முறையாக நிர்மலா சீதாராமன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார் . ஜிஎஸ்டி கவுன்சிலை பொருத்தவரை மூன்று விஷயங்களுக்கு அமைச்சர்கள் குழுவை நியமனம் செய்திருக்கிறது.

அமைச்சர்கள் குழு: பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராஜ் சவுத்ரி தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து ஆய்வு செய்கிறது. மத்திய நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சவுத்ரி தலைமையிலான அமைச்சர்கள் குழு காம்பன்சேஷன் செஸ் வரி குறித்த விவரங்களை ஆய்வு செய்ய இருக்கிறது.

அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மத்திய அரசின் பரிந்துரையை அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டால் அடுத்ததாக இந்த விவகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனைக்கு செல்லும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்பார்கள். அடுத்த மாதம் அந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. எனவே அதில் அனுமதி வந்தால் பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பல்வேறு பொருட்களின் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+