இந்தியாவில் வரும் 22ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு நடைமுறைக்கு வருகிறது . மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்களின் விலை குறைய போகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய சோப்பு ஷாம்பு உள்ளிட்டற்றில் தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள், கார், இருசக்கர வாகனம் என பல்வேறு பொருட்களின் விலை குறைய போகிறது.
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கக்கூடிய சூழலில் ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களின் நுகர்வு போக்கை பெரிய அளவில் அதிகரிக்கும். இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பில் மிக முக்கியமான விஷயமாக கவனிக்கப்பட வேண்டியது காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி முழுவதுமாக நீக்கப்பட்டதுதான். இதுநாள் வரை இந்தியாவில் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு திட்டங்களுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி தொகையாக செலுத்தி வந்தோம். அதனை தற்போது பூஜ்ஜியமாக மாற்றி இருக்கிறார்கள்.

காப்பீடு திட்டங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய தேவையில்லை. காப்பீடு திட்டங்கள் வரியற்றவையாக மாறி இருக்கின்றன . இதன் மூலம் நாம் காப்பீடு திட்டங்களுக்காக செலுத்தும் பிரீமியம் தொகை என்பது கணிசமான அளவு குறைய இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு இல்லாமல் இருக்கிறது. அனைவருக்கும் இது சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஜிஎஸ்டி கவுன்சில் காப்பீடு திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வேண்டாம் என முழுவதுமாக விலக்கு தந்திருக்கிறது.
இதற்கிடையே டெல்லியில் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ஐஆர்டிஐ, பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது காப்பீட்டு நிறுவனங்கள் இந்த ஜிஎஸ்டி வரி விலக்கின் மூலம் கிடைக்கும் பலன்களை நேரடியாக பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கராராக தெரிவிக்கப்பட்டது .
மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் செயலாளர் நாகராஜு இந்த கூட்டத்தில் பேசிய போது அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் இந்த ஜிஎஸ்டி வரி விலக்கு பலன்கள் முழுவதும் பாலிசிதாரர்களுக்கு சென்ற சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறினார். ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் காரணமாக காப்பீடு பிரீமியங்கள் எவ்வளவு குறைந்திருக்கின்றன எப்படி அவை அனைத்து மக்களும் எளிமையாக வாங்கும் வகையில் மாறி இருக்கின்றன என்பது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும் அனைத்து மக்களையும் இது சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தினார்.
பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் , ஐஆர்டிஏஐ அதிகாரிகள் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 18 சதவீத ஜிஎஸ்டி வரி விலக்கு என்பது பிரீமியம் தொகையை கணிசமான அளவு குறைக்கும். உதாரணமாக 20000 ரூபாய் பிரீமியம் கொண்ட ஒரு காப்பீடு திட்டத்தில் இதுநாள் வரை 18% ஜிஎஸ்டி சேர்த்து 23,600 ரூபாயாக செலுத்தினோம், இனி அந்த 20000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications