பெங்களூர்: மற்ற துறைகளை காட்டிலும் ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இன்றைய கால கட்டத்தில், ஐ.டி. நிறுவனங்களின் மொத்த செலவினங்களில் பணியாளர்களின் செலவு மிகப்பெரிய செலவாகும்.

இது ஐ.டி. நிறுவனங்களின் மொத்த செலவினத்தில் 50 முதல் 60 சதவீதமாக உள்ளது. இந்திய ஐ.டி. துறையின் சந்தை மதிப்பு 24,500 கோடி டாலராகும்.
சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும் உலக அளவில் தொழில்நுட்ப செலவினம் குறைந்தது போன்ற காரணங்களால் இந்திய ஐ.டி. நிறுவனங்களின் வருவாய் பாதித்துள்ளது. இதனால் இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு சென்ற ஆண்டைக் காட்டிலும் பாதியாக குறையலாம்.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஐடி துறையில் சம்பள அதிகரிப்பு சராசரியாக 12 முதல் 18 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு சம்பள உயர்வு விகிதம் 6 முதல் 10 சதவீதமாக குறையலாம் என்று கூறப்படுகிறது.
சர்வதேச ஐ.டி. நிறுவனமான Accenture இந்த மாத தொடக்கத்தில், 2023ல் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்போவதில்லை என்று தனது பணியாளர்களுக்கு இமெயில் அனுப்பியது. அதேசமயம், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் ஊதிய உயர்வு நடவடிக்கையை ஒரு காலாண்டு தாமதப்படுத்தியது. இந்த மாதம் ஊதிய உயர்வு நடவடிக்கையை செயல்படுத்துகிறது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களை தற்போதைய ஊதிய உயர்வு சுற்றில் இருந்து விலக்கியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த சிறப்பு பணியாளர் நிறுவனமான Xpheno-ன் இணை நிறுவனர் கமல் காரந்த் கூறுகையில், தற்போதைய பொருளாதார மந்தநிலை மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப செலவிடுதல் மேலும் குறைந்து விட்டால், இந்த ஆண்டு பணியாளர்களின் ஊதியம் 6 முதல் 10 சதவீதம் அதிகரிப்பு நம்பிக்கையுடன் இருக்கும். அதேசமயம், பெர்மான்ஸ் நன்றாக இருக்கும் பணியாளர்கள் கூடுதல் சம்பள உயர்வு பெறுவார்கள். ஏனென்றால் நிறுவனங்கள் செயல்திறன் மிக்கவர்கள் மீது முதலீடு செய்கின்றன என்று தெரிவித்தார்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications