தனியார் நிதித்துறையில் முன்னணி நிறுவனமான ஹெஸ்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தின் 1.01% பங்கினை, அதாவது 1.75 கோடி பங்குகளை (1,74,92,909), சீனாவின் மக்கள் வங்கி வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது மும்பை பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் ஹெஸ்டிஎஃப்சி லிமிடெட்அறிவித்துள்ளது.
தனியார் துறையினை சேர்ந்த மிகப்பெரிய கடன் வழங்குனரான ஹெஸ்டிஎஃப்சி லிமிடெட், கடந்த ஒரு மாத காலமாகவே கொரோனா வைரஸின் பரவல் காரணமாக அதன் பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
பங்கு வீழ்ச்சி
குறிப்பாக சொல்லவேண்டுமானால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதன் பங்கு விலை 25 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. இந்த நிலையில் பிஎஸ்இ- யில் ஹெச்டிஎஃப்சி லிமிடெட் பங்கு விலையானது 1,701.95 ஆக உள்ளது. கடந்த ஜனவரி 14, 2020 அன்று, ஹெச்டிஎஃப்சி லிமிடெட் பங்கு விலை 32 சதவீதம் அதிகரித்து அதன் 52 வார உச்சத்தினை 2,499.65 ரூபாயினை தொட்டது. அந்த நேரத்தில் சென்செக்ஸ் 25 சதவீதம் வீழ்ச்சியும், இதே நிஃப்டி 50யும் 26 சதவீத வீழ்ச்சியடைந்தும் காணப்பட்டது.
இவங்களும் பங்கு வைத்திருக்காங்க
இதனையடுத்தே இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பு வந்துள்ளது. ஏற்கனவே வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் 70.88 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இதில் சிங்கப்பூர் அரசு கூட 3.23 சதவீத பங்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல இடங்களில் பங்கு
சீனாவின் மக்கள் வங்கி ஏற்கனவே உலகம் முழுக்க உள்ள பல நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ள நிலையில், தற்போது இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட்டிலும் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த வங்கி குறைந்த அளவு பங்கினை ஹெச்டிஎஃப்சியில் பங்கு வைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் முதலீடு செய்துள்ளது
ஏற்கனவே பங்கு உண்டு
எனினும் இதில் எவ்வளவு தொகை, என்ன காரணம் என தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனினும் என்.டி.டிவிடம் பேசிய ஹெச்டிஎஃப்சியின் துணைத் தலைவரும் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெக்கி மிஸ்திரி PBOC ஏற்கனவே பங்கு தாரராக இருந்து வருவதாகவும், இது 2019 நிலவரப்படி நிறுவனத்தில் 0.8 சதவீதத்தை சொந்தமாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த பங்கு 1 சதவீத ஒழுங்குமுறை வரம்பைத் தாக்கியதால் இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications