மும்பை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா ரூ.2 குறைத்து எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனங்கள் சிஎன்ஜி விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.2.5 குறைத்துள்ளதோடு, மத்திய அரசும் எல்பிஜி விலையை சிலிண்டருக்கு ரூ.100 என குறைத்துள்ளது.
பெட்ரோல் , டீசல் விலை குறைப்புக்கு பின்னர், (மார்ச் 15இல்) எண்ணெய் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சராசரியாக 6% வரை குறைந்தன. IOCL பங்கு 5.49% வரை குறைந்து ரூ.161க்கும், BPCL பங்கு 3.66% வரை குறைந்து ரூ.586.45க்கும், HPCL பங்கு 6.25% வரை குறைந்து ரூ.468.85க்கு வர்த்தகமானது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, எண்ணெய் நிறுவனங்களின் நிகர லாபம் விகிதங்களை பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எண்ணெய் நிறுவனங்களின் லாப அளவுகள் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.2.20 அளவிலும், பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.3.5 அளவிலும் குறையும் என எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த விலை குறைப்பு அடுத்த இரண்டு முதல் இரண்டரை மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் பொது தேர்தல்கள் முடிந்ததும் இயல்பான நிலைக்கு திரும்பும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விலை மாற்றத்திற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு முக்கிய பங்காற்றும்.
தற்போதைய எரிபொருள் விலைக் குறைப்பானது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் நடப்பு நிதியாண்டு வருவாய் மதிப்பீடுகளை பாதிக்காது என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த நிதியாண்டில் கடைசி இரண்டு வாரங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 1.6 மற்றும் 1.7 ஆக குறைந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 பிரிண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 85 டாலராக குறைந்து தற்போது இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது தொடர்பான நமது ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை நாங்கள் பராமரிக்கிறோம் என எம்கி குளோபல் தெரிவித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் வளர்ச்சி அடையும் என்ற நிலையில் இருந்து மாறப்போவதில்லை என கூறியுள்ளனர்.
மதிப்பீடுகள் என்ற அடிப்படையில் பார்த்தால், கடந்த 4-5 மாதங்களாக வலுவான ஏற்றம் அடைந்து வந்த எண்ணெய் நிறுவன பங்குகள், பிரைஸ் டூ புக் மதிப்பீடுகளை விட 15-25% பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்படுகின்றன என ஜே.எம். பைனான்சியல் நிறுவனம் கூறியுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோல் கார்ப்பரேஷன் பங்குகள் (HPCL) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்குகள் (IOCL) சராசரியான 1.0 x-ஐ விட தற்போது 1.4 x என வர்த்தகமாகிறது என ஜே.எம். பைனான்சியல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதே போல பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) பங்குகள், சராசரியை விட 1.6 x என வர்த்தகமாகிறது.
எனவே ஜே.எம். பைனான்சியல் நிறுவனம் IOCL மற்றும் HPCL பங்குகளுக்கு விற்பனை செய்யலாம் என்ற மதிப்பீட்டை தந்துள்ளது. அதே வேளையில் BPCL பங்கினை வைத்துக் கொள்ளலாம் என மதிப்பீடு தந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications