சென்னை: எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் பொருட்டு பிரதம மந்திரி காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு சம்பா பயிருக்கு காப்பீடு தொகை பெற விண்ணப்பம் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.
பருவநிலை மாற்றம் காரணமாக எப்போது மழை பெய்கிறது, எப்போது வறட்சி வருகிறது என்பதை நம்மால் கணிக்கவே முடிவதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். எனவே இது போன்ற எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும் விவசாயிகளின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில் ரபி மற்றும் ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பிரீமியம் தொகை செலுத்துவதற்கு நவம்பர் 15ஆம் தேதியான இன்றே கடைசி நாள் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 36 , 500 ரூபாய் வரை இழப்பீடாக பெறலாம்.
விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல் ,சூறாவளி ,பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு காப்பீடு வழங்குவதே பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் நோக்கம் ஆகும்.
விவசாயிகள் இதற்காக 500 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை அவர்கள் செய்திருக்கும் பயிரை பொறுத்து பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். நடப்பு பருவத்திற்கான பிரீமியம் தொகை செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.
விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் அடங்கல் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றை கொண்டு சென்று ஈ சேவை மையங்களில் காப்பீடு பெற விண்ணப்பம் செய்யலாம். நடப்பு பருவத்திற்கான பிரீமியம் செலுத்தும் கால அவகாசம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கியது, அது நவம்பர் 15ஆம் தேதியான இன்றுடன் முடிவு பெறுகிறது.
இதனிடையே தொடர்ச்சியாக தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வந்ததால் பெரும்பாலான விவசாயிகள் பிரீமியம் தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். மேலும் போதிய ஆட்கள் கிடைக்காததால் உரிய காலத்தில் பயிர் செய்ய முடியவில்லை என்ற தகவலையும் தெரிவிக்கின்றனர்.
எனவே பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக எந்த ஒரு தகவலையும் அரசு வெளியிடவில்லை.
எனவே இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ,தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது ஈ சேவை மையங்களில் நேரடியாக சென்று இந்த காப்பீடு திட்டத்திற்காக விண்ணப்பம் செய்து பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications