பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாரணாசிக்கு சென்ற போது, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் 17வது தவணையை இந்திய விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டார். இதன் மூலம், 9.26 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான மத்திய அரசின் நிதி உதவியைப் பெற்றனர்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, முதலும் முக்கிய அறிவிப்பாக இது இருக்கிறது. பிஎம் கிஸ்ஸான் திட்டத்தின் 17வது தவணையை வழங்குவது குறித்து கடந்த வாரமே வெளியிட அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இதற்கான அறிவிப்பை இன்று வாரணாசிக்கு சென்ற போது அறிவித்தார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் உலகின் மிகப்பெரிய நேரடி பயன் திட்டமாக விளங்குகிறது. அதாவது அரசிடம் இருந்து நேரடியாக மக்களுக்கு நிதியுதவி அளிக்கும் உலகின் மிகப்பெரிய திட்டமாக உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உயர் வருமானம் கொண்ட விவசாயிகள் போன்ற சில பகுதியினரை நீக்கிவிட்டு, நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 2019 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஒரு விவசாயிக்கு ரூ.6,000/- நிதி உதவியை மூன்று தவணைகளில் அரசு செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. இந்த தொகை ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, நேரடி பணப்பரிமாற்ற முறை (DBT) மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயக் குடும்பங்களின் வங்கி கணக்குகளுக்கு மத்திய அரசு டெபாசிட் செய்கிறது.
இதுவரை, நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3.04 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தொகை இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த 17வது தவணை வெளியீட்டின் மூலம், இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து விவசாயிகளுககு கொடுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.3.24 லட்சம் கோடியாகும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications