சென்னை: மக்களிடையே நுகர்வு போக்கை அதிகரிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியில் பெரிய அளவிலான சீர்திருத்தத்தை கொண்டு வர பரிந்துரை செய்திருக்கிறது மத்திய அரசு. இது தொடர்பாக அடுத்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது.
ஜிஎஸ்டி வரி: இந்தியாவில் தற்போது 5, 12, 18 , 28 என நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது . இதனை 5 மற்றும் 18 என இரண்டாக மட்டுமே குறைக்க வேண்டும் என அரசு பரிந்துரை செய்திருக்கிறது. அதே வேளையில் புகையிலை ,மதுபானம், சூதாட்டம் உள்ளிட்டவருக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்றும் அரசு தன்னுடைய பரிந்துரையில் கூறி இருக்கிறது.

விலை குறையும் பொருட்கள்: அரசின் இந்த பரிந்துரைக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் இந்தியாவில் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்களின் விலை குறையும். 12 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருக்கக்கூடிய 95 சதவீத பொருட்கள் 5 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தின் கீழ் வந்துவிடும். இதனால் பல்வேறு பொருட்களின் விலை குறையும். அதேபோல 28 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் இருக்கக்கூடிய பெரும்பாலான பொருட்கள் 18 சதவீத ஜிஎஸ்டி கீழ் வந்துவிடும். எனவே அந்த பொருட்களும் கிட்டதட்ட 10 சதவீதம் வரை நாம் விலை குறைவை எதிர்பார்க்கலாம்.
பிரீமியம் பைக்குகள்: இருசக்கர வாகனங்கள் சிறிய ரக கார்களின் விலை கூட குறைய இருக்கிறது. ஆனால் பிரீமியம் ரக இருசக்கர வாகனங்களுக்கான விலை இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்திற்கு பிறகு 45 ஆயிரம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . ஏனெனில் அரசு பிரீமியம் ரக இரு சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.
30% வரை விலை உயர்வு: தற்போது இந்தியாவில் 350 சிசிக்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 3 சதவீத செஸ் வரி என மொத்தம் 31 சதவீதம் வரி வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் அரசு இதனை 40 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. இதனை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கும் பட்சத்தில் பிரீமியம் ரக பைக்குகளின் விலை 30% வரை உயரும்.
எவ்வளவு உயரும்: அதாவது ராயல் என்பீல்டு, அப்ரிலியா, ஹார்லி டேவிட்சன் , கேடிஎம் போன்ற பைக்குகளின் விலை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை உயரும் என சொல்லப்படுகிறது. உதாரணமாக ராயல் என்ஃபீல்டின் Interceptor 650 பைக் ஆன் ரோடு விலை 3. 80 லட்சம் ரூபாயாக இருக்கிறது இது ஜிஎஸ்டி வரி உயர்விற்கு பின் 4.13 லட்சம் ரூபாய் என 34 சதவீதம் விலை உயர்வை காண இருக்கிறது. அதே போல KTM 390இன் தற்போதைய ஆன் ரோடு விலை 3.60 லட்சம் இது 3.91 லட்சம் ரூபாயாக விலை உயர வாய்ப்பு இருக்கிறது.
சிறிய ரக பைக்குகள் விலை குறையும்: சிறிய ரக ஸ்கூட்டர் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு விலை குறையும் ஆனால் பிரீமியம் ரக இருசக்கர வாகனங்களை வாங்குவோர் அதிக விலையை கொடுக்க வேண்டி இருக்கும். பிரீமியம் பைக்குகளின் ஜிஎஸ்டி 40% என உயர்த்தப்பட்டால் அதன் அடிப்படை விலை மட்டும் உயராது, ஆர்டிஓ கட்டணம், சாலை வரி, காப்பீடு கட்டணம் என அனைத்துமே உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications