GST குறைப்புக்கு பின்னும் பொருட்களின் விலையை குறைக்கவில்லையா?– இந்த வாட்ஸ் அப் நம்பர்ல புகார் செய்யலாம்!!

இந்தியாவில் கடந்த 22 ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி வரி திருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன் மூலம், பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. இருந்தாலும் சிலர் தொடர்ந்து பழைய விலைக்கே பொருட்களை விற்பதாக மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகள் வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி என்பது வசூல் செய்யப்படுகிறது. முதலில் 5,12,18,28 என இருந்த ஜிஎஸ்டி விகிதங்கள் தற்போது 5,18,40 என குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழிருந்த பல்வேறு பொருட்களும் 18 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டன .

GST குறைவுக்கு பின்னும் பொருட்களின் விலையை குறைக்கவில்லையா?– இந்த வாட்ஸ்அப் நம்பர்ல புகார் செய்யலாம்

அதேபோல 12 சதவீத வரி விதிப்பின் கீழ் இருந்த பெரும்பாலான பொருட்கள் 5% வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டன. மக்கள் தங்கள் வீடுகளில் அன்றாட பயன்படுத்தக்கூடிய பால் , பேஸ்ட் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள் காப்பீடு திட்டங்கள் என பலவற்றின் விலையும் இதன் காரணமாக குறைந்து இருக்கிறது.

பெரும்பாலான நிறுவனங்கள் அரசு வழங்கியிருக்கக்கூடிய இந்த ஜிஎஸ்டி வரி திருத்தத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை முழுவதுமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம் என அறிவித்த பல்வேறு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன. 22ஆம் தேதி முதலே இது அமலுக்கும் வந்துவிட்டது.

இந்த சூழலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் யாரேனும் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம் அல்லது ஏதேனும் ஒரு கடையில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பிறகும் பொருட்களின் விலையை குறைக்காமல் அப்படியே பழைய விலைக்கே விற்பனை செய்கிறார்கள் என்றால் மக்கள் உடனடியாக 1915 என்ற தேசிய கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் 8800001915 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது . அதேபோல ஒருங்கிணைந்த புகார் தளமான INGRAM தளம் மூலம் நுகர்வோர் தங்களுடைய புகாரை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு தொடர்ச்சியாக அனைத்து பொருட்களின் விலை நிலவரங்களையும் கண்காணித்து வருவதாக தெரிவித்து இருக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் பொதுமக்கள் யாரேனும் ஏமாற்றுவதாக தெரிந்தால் உடனடியாக புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு பிறகு பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்து விட்டன. இருந்தாலும் சில விற்பனையாளர்கள் அல்லது டீலர்கள் விலை குறைப்பை நடைமுறைக்கு கொண்டு வராமல் இருக்கிறார்கள் எனும்போது இந்த எண்களை பயன்படுத்தி புகார் அளித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+