கொரோனா தொற்றால் நாடு முழுவதும் மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தும், வர்த்தகத்தை இழந்தும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், உயிர்காக்கும் பல கொரோனா மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீது மத்திய அரசு அதிகளவிலான ஜிஎஸ்டி வரியை விதித்து வந்தது.
இதனால் மருத்துவமனையிலும், வீடுகளிலும் மருத்துவச் சிகிச்சை பெற்றுவருவோர் கொரோனா மருந்துக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் அதிகளவிலான பணத்தைச் செலவிட வேண்டிய நிலை உருவானது.
பல மாதங்களாக மாநில அரசுகள் மத்திய அரசிடமும், ஜஎஸ்டி கவுன்சில் அமைப்பிடமும் கொரோனா மருந்துக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் வரி குறைக்க வலியுறுத்திய நிலையில் நேற்று நடந்த 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பலவற்றுக்குக் குறைக்கப்பட்டது. ஆனால் இது போதுமானது அல்ல என்று தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டவீட்
இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 3மாத காலத்திற்குக் கோவிட் தொற்றுக்கான மருந்து & கருவி மீது 5% வரியைச் செலுத்துவதனால் அரசுக்கு வரும் தொகை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
0-0.1%வரி விதிப்பதே சரி
தரவுகளின்றி முடிவெடுக்கப்படும் இம்முறையை மாற்றி இக்கட்டான நிலையில் இரக்கத்துடன் செயல்பட்டு 0-0.1%வரி விதிப்பதே ஏற்புடையது என என் கருத்தை முன்வைத்தேன் என ஜிஎஸ்டி கூட்டத்தில் தான் முன்வைத்துள்ள கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம்
மேலும், கொரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்குப் பூஜ்ய விகித வரி நிர்ணயிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறது.
கோவிட் வேக்சின் மீதான ஜிஎஸ்டி
நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மிகவும் கவலை அளிக்கக் கூடிய விஷயம் என்றால் அது கோவிட் வேக்சின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காதது தான்.
5 சதவீத ஜிஎஸ்டி வரி
கோவிட் வேக்சின் மீது தற்போது நடைமுறையில் இருக்கும் 5 சதவீத வரி தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications