கொரோனா தொற்றால் நாடு முழுவதும் மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தும், வர்த்தகத்தை இழந்தும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், உயிர்காக்கும் பல கொரோனா மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீது மத்திய அரசு அதிகளவிலான ஜிஎஸ்டி வரியை விதித்து வந்தது.
இதனால் மருத்துவமனையிலும், வீடுகளிலும் மருத்துவச் சிகிச்சை பெற்றுவருவோர் கொரோனா மருந்துக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் அதிகளவிலான பணத்தைச் செலவிட வேண்டிய நிலை உருவானது.
பல மாதங்களாக மாநில அரசுகள் மத்திய அரசிடமும், ஜஎஸ்டி கவுன்சில் அமைப்பிடமும் கொரோனா மருந்துக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் வரி குறைக்க வலியுறுத்திய நிலையில் நேற்று நடந்த 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பலவற்றுக்குக் குறைக்கப்பட்டது. ஆனால் இது போதுமானது அல்ல என்று தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டவீட்
இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 3மாத காலத்திற்குக் கோவிட் தொற்றுக்கான மருந்து & கருவி மீது 5% வரியைச் செலுத்துவதனால் அரசுக்கு வரும் தொகை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
0-0.1%வரி விதிப்பதே சரி
தரவுகளின்றி முடிவெடுக்கப்படும் இம்முறையை மாற்றி இக்கட்டான நிலையில் இரக்கத்துடன் செயல்பட்டு 0-0.1%வரி விதிப்பதே ஏற்புடையது என என் கருத்தை முன்வைத்தேன் என ஜிஎஸ்டி கூட்டத்தில் தான் முன்வைத்துள்ள கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம்
மேலும், கொரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்குப் பூஜ்ய விகித வரி நிர்ணயிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறது.
கோவிட் வேக்சின் மீதான ஜிஎஸ்டி
நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மிகவும் கவலை அளிக்கக் கூடிய விஷயம் என்றால் அது கோவிட் வேக்சின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காதது தான்.
5 சதவீத ஜிஎஸ்டி வரி
கோவிட் வேக்சின் மீது தற்போது நடைமுறையில் இருக்கும் 5 சதவீத வரி தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications