தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சியின் விளைவால் ஆன்லைன் விளையாட்டுகள் உருவாகி ஈசல் போல் பரவி விட்டது. இந்த விளையாட்டுகளில் பணமும் சம்பாதிக்கலாம் என்பதால் இவை இளைஞர்களை எளிதாக ஈர்க்கிறது. இன்று பெரும்பாலான இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கின்றனர்.
ஆன்லைன் ஃபேன்டஸி விளையாட்டு தளங்களில் பிரபலமானது ட்ரீம் 11. இது ஃபேன்டஸி கிரிக்கெட், ஹாக்கி,கால்பந்து, கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, ரக்பி மற்றும் பேஸ்பால் உள்ளிட்ட பல விளையாட்டுகளை விளையாட பயனர்களை அனுமதிக்கிறது.

ட்ரீம் 11, பயனர்களை நிஜ விளையாட்டு வீரர்களின் விர்ச்சுவல் அணியை உருவாக்கவும், உண்மையான போட்டியில் இந்த வீரர்களின் செயல்திறன் அடிப்படையில் புள்ளிகளை பெறவும் அனுமதிக்கிறது.
மகாராஷ்டிராவை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஆன்லைன் விளையாட்டில் ரூ.1.5 கோடி சம்பாதித்துள்ளார். ஆனால் அதுவே அவரது வேலைக்கும் ஆபத்தாக அமைந்து விட்டது. புனே நகரத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சோம்நாத் ஜெண்டே.
கடந்த பல மாதங்களாக ட்ரீம் 11 கிரிக்கெட் போட்டிகளில் தீவிரமாக பங்கேற்றதோடு, ரூ.1.5 கோடியும் சம்பாதித்துள்ளார். இதனையடுத்து ஆன்லைன் விளையாட்டில் சோம்நாத் ஜெண்டே அதிக தொகையை வென்றார் என்ற செய்தி பரவியது.
இந்த செய்தி புனே காவல்துறை காதுக்கும் எட்டியது. உடனே புனே காவல்துறை, காவல்துறை துணை ஆணையர் ஸ்வப்னா கோர் தலைமையிலான குழு அமைத்து இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
விசாரணையில், சோம்நாத் ஜெண்டே அனுமதியின்றி ஆன்லைன் விளையாடியது மற்றும் பணம் சம்பாதித்தது குறித்து சீருடையில் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சோம்நாத் ஜெண்டே அவரது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
காவல்துறை துணை ஆணையர் ஸ்வப்னா கோர் கூறுகையில், விசாரணைக்கு பிறகு, சோம்நாத் அனுமதியின்றி ட்ரீம் 11 விளையாட்டை விளையாடியது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இது மற்ற காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு நினைவூட்டலாக இருக்கும். ஆன்லைன் விளையாட்டை விளையாடினால் அவர்களும் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதை தவிர்கக வேண்டும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications