கத்தார் நாட்டின் சாவரின் வெல்த் பண்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பைஜூ ரவீந்திரனின் தனிப்பட்ட சொத்துக்களை முடக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. ரவீந்திரன் தனது சொத்துகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, மாற்றவோ தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
கத்தார் முதலீட்டு ஆணையம் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களில் ஒன்று. இந்த அமைப்பு தொடர்ந்துள்ள வழக்கில், பைஜூ ரவீந்திரன் மற்றும் அவரது ஊழியர்கள் ரவீந்திரனின் சொத்துகளை விற்கவோ, அடமானம் செய்யவோ, வேறு வழிகளில் மாற்றவோ தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

மத்தியஸ்தம் மற்றும் சமரசம் சட்டம் 1996இன் கீழ் ரவீந்திரனின் 235.9 மில்லியன் டாலர் மதிப்புள்ள தனிப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்து தருமாறு கத்தார் முதலீட்டு ஆணையம் கேட்டுள்ளது. இந்த பைஜூஸில் 2019 மற்றும் 2022இல் கத்தார் முதலீட்டு ஆணையம் முதலீடு செய்தது. 2022 அக்டோபரில் கத்தார் ஆணையம் உள்பட முதலீட்டாளர்களிடம் இருந்து 250 மில்லியன் டாலர்களை பெற்றதாக பைஜூஸ் கூறியது.
இதனிடையே கடுமையான நிதி பிரச்னை, சட்ட சிக்கல்கள் காரணமாக பைஜூஸ் நெருக்கடிகளுக்கு ஆளானது. குறைந்தது 7 வணிக நிறுவனங்களாவது தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் பைஜூஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நிலுவைத் தொகையை மீட்டுத் தருமாறு கோரின.
அடக்குமுறை மற்றும் தவறான நிர்வாகத்தின் குற்றச்சாட்டுகளுடன், என்சிஎல்டி மற்றும் அதன் மையங்களில் உள்ள நிறுவனத்தின் $200 மில்லியன் உரிமைகள் விவகாரத்தில் பைஜூஸுக்கும் அதன் முதலீட்டாளர்களுக்கும் இடையேயான சண்டையும் இதில் அடங்கும். முதலீட்டாளர்கள் போரஸ், ஜெனரல் அட்லான்டிக், சோபினா, பீக் எக்ஸ்வி ஆகியவை உரிமைப் பிரச்னையில் தடையை கோரியுள்ளன, பைஜூஸின் உச்ச மதிப்பான $22 பில்லியனில் 99 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பீட்டை ஏற்க மறுக்கின்றன.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications