பேப்பர் பேக் மூலம் மாதம் ரூ.10 லட்சம் வருமானம்.. தனி பெண்ணாக அசத்தும் ரக்சனா மோகன்..!

எந்தவித பின்புலமும் இல்லாமல் கடினமாக உழைத்து முன்னேறிய பல பணக்காரர்களின் வாழ்க்கை அனுபவத்தை படிக்கும் போது, நாமும் இது போன்று ஏதாவது செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் ஏற்படும். அது போன்ற உணர்வை உத்தரபிரதேசத்தை சேர்ந்த கணவனை இழந்த பெண் தொழில்முனைவோர் ரக்சனா மோகனின் கதையை நாம் படிக்கும் போது நிச்சயம் ஏற்படும் என்று உறுதியாக சொல்லலாம்.

பேப்பர் பேக் மூலம் மாதம் ரூ.10 லட்சம் வருமானம்.. தனி பெண்ணாக அசத்தும் ரக்சனா மோகன்..!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரை சேர்ந்த பெண்மணி ரக்சனா மோகன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரக்சனா மோகன் தனது கணவருடன் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ரக்சனா மோகனின் கணவர் நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வந்தார்.
கணவரின் சிகிச்சைக்காக கையில் இருந்த பணம் அனைத்தும் காலியானது.

இந்நிலையில் 2018ல் ரக்சனா மோகனின் கணவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். கணவர் இறந்தவுடன் ரக்சனா மோகன் கடுமையான நிதிநெருக்கடியை சந்தித்தார். இருப்பினும் அந்த நெருக்கடியில் இருந்து வெளிவர ஏதாவது செய்து சொந்த காலில் நிற்க வேண்டும் என்று வைராக்கியம் ரக்சனா மோகனின் மனதில் எழுந்தது.

பேப்பர் பேக் மூலம் மாதம் ரூ.10 லட்சம் வருமானம்.. தனி பெண்ணாக அசத்தும் ரக்சனா மோகன்..!

வீட்டில் காகித பைகளை தயாரித்து விற்கலாம் என்ற யோசனை அவருக்கு ஏற்பட்டது. உடனே அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரக்சனா மோகன் எடுத்தார். ரக்சனா மோகன் முதலில் வங்கியில் பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் கடன் வாங்கினார்.

அதில் ரூ.14.5 லட்சம் முதலீட்டில் காகித பை தயாரிக்கும் இயந்திரத்தை வீட்டில் நிறுவினார். எஞ்சிய பணத்தில் காகித பை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கினார். தினமும் காகித பைகளை தயாரித்து, அவரே ஷாஜஹான்பூர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் விற்பனை செய்தார்.

தற்போது அவரது காகித பை வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. காகித பை தொழில் தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில் ரக்சனா மோகனின் வியாபாரம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது.

தற்போது ரக்சனா மோகனின் காகித பை தயாரிக்கும் தொழிலில் சுமார் மூன்று டஜன் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். அவரது மாதாந்திர வருமானம் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக உள்ளது. சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் உச்ச மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் ரூ.5 கோடி ரூபாய் முதலீடு ரக்சனா மோகன் ஒப்புக் கொண்டார்.

இது அவரது வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ரக்சனா மோகன் தனது வளர்ச்சி குறித்து பேசுகையில், இந்த சுயதொழில் முயற்சி எனது குடும்பத்தை நடத்த போதுமானது. கணவர் இறப்புக்கு பிறகு அதனால் ஏற்படும் நெருக்கடியான உணர்வை சந்தித்தேன் இருப்பினும் நான் தைரியத்தை இழக்கவில்லை. தனது தொழிலில் எனது மகன் புரு மோகனும் உதவியாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+