இந்திய வம்சாவளியை சேர்ந்த என்ஜினீயர் ராகுல் பாண்டே. இவர் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மற்றும் மேலாளராக இருந்தார். மெட்டாவில் ஆண்டுக்கு ரூ.6.5 கோடி மேல் சம்பளம் வாங்கினார்.
இந்நிலையில் ராகுல் பாண்டே கடந்த ஆண்டு (2022) மெட்டாவிலிருந்து வெளியேறினார். ரூ.6.5 கோடி மெட்டா வேலையை வேண்டாம் என்று ராகுல் பாண்டே ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் பாண்டே மெட்டா வேலையை உதறியது ஏன் என்பது குறித்து ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ராகுல் பாண்டே கூறுகையில், எனது பயணம் எடுத்த உடனே 100 டாலர் நோட்டுகளை எண்ணும் அளவுக்கு சீராக அமையவில்லை. நான் பேஸ்புக்கில் சேர்ந்த முதல் ஆறு மாதங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தேன். நான் ஒரு மூத்த என்ஜினீயராக இருக்க எனக்கு திறன் இருக்கிறதா என்று என்னுள் சந்தேகம் ஏற்பட்டது.
நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் பணிக்கு தகுந்த மாதிரி மாற சிரமப்பட்டேன். நான் சேர்ந்த ஒராண்டுக்குள் பேஸ்புக் உள்விவகாரங்களால் போராட்டங்களை எதிர்கொண்டது இதனால் பேஸ்புக் பங்கு மதிப்பில் சரிவு ஏற்பட்டது. இது என் நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை அசைத்து பார்த்தது.
இந்த பிரச்சினைக்கு மத்தியில், எனது சக ஊழியர்கள் பலர் நிறுவனத்தில் இருந்து வெளியேறி வேறு நிறுவனங்களில் சேர்ந்தனர். இதனால் நான் ஈடுபட்டு இருந்த பல திட்டங்கள் தாமதம் ஏற்பட்டது. நான் நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வருடமே ஆகியிருந்தபோது, வேறு நிறுவனத்துக்கு விரைவில் மாறுவோம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இருப்பினும் அதற்கு பதிலாக எனது செயல்திறனை மேம்படுத்த ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டேன். பேஸ்புக்கில் இரண்டாம் ஆண்டின் முடிவில், பல்வேறு பிரிவுகளில் என்ஜினீயர்களால் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு கருவியை உருவாக்கினேன். அதன் மூலம் நேரம் அதிகம் மிச்சமாகும்.
நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்றேன். அடிப்படை சம்பளமாக ரூ.2 கோடி மற்றும் சுமார் 2 கோடி பங்குகளை பெற்றேன். இருப்பினும் கோவிட் காரணமாக வேறு நிறுவனத்தில் வேலை தேட தொடங்கினேன். பேஸ்புக்கில் பணியாற்றிய கடைசி ஆண்டில் நான் மேலாளராக பணியாற்றினேன், அதே நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் கழித்து குழு மாறினேன்.
2021ம் ஆண்டு முடிவடைந்தவுடன், நான் மெட்டாவை தாண்டி உலகை ஆராய ஆரம்பித்தேன். தொழில்நுட்ப துறையில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றி பிறகு ஒரளவு நான் நிதி சுதந்திரம் (செல்வ செழிப்பு) அடைந்தேன்.
என்ஜினீயரிங்குக்கு அப்பால் இன்னும் எவ்வளவோ கற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன். 2021ல் எனது மொத்த இழப்பீடு 8 லட்சம் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.6.5 கோடிக்கு மேல்) தாண்டியது. இவ்வளவு பெரிய தொகை கிடைக்க காரணம் எனது நீடித்த வலுவான செயல்திறன் மற்றும் மெட்டாவின் பங்கு விலை உயர்ந்தது.
நாட்டில் அதிகம் வருமானம் ஈட்டும் முதல் 1 சதவீத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். அந்த மட்டத்தில், பணம் உண்மையில் தகுதியானதாக உணரவில்லை, அதிர்ஷ்டம் ஒரு பெரிய பங்கினை வகிக்கிறது என்று தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications