தொழில் தொடங்கிய உடனே வெற்றி பெறுவது என்பது எல்லோருக்கும் சாத்தியமாகாது. நமது தொழில் முயற்சியில் சில எதிர்பாராத தோல்விகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதனை கடந்து விட்டால் வெற்றி என்றுமே நம் பக்கம்தான்.
ரமேஷ் ரூபாரேலியா-வின் வாழ்க்கை அதற்கு நல்ல உதாரணம். கடன் சுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடியால் மாடு மேய்க்கும் தொழிலை செய்த அவர் இன்று பால் பொருட்கள் வர்த்தகத்தில் ஆண்டுக்கு பல கோடி சம்பாதிக்கிறார்.

குஜராத்தை சேர்ந்த பிரபலமான பால் பொருள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்று ஸ்ரீ கிர் கௌ க்ரிஷி ஜதன் சன்ஸ்தா. இந்த நிறுவனத்தை தொடங்கியவர் 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ரமேஷ் ரூபாரேலியா-ல். இவர் குஜராத்தில் சிறிய கிராமத்தில் ஒரு விவசாயிக்கு மகனாக பிறந்தவர் குழந்தை பருவம் முதலே அவர் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்தித்து வந்தார். இந்த சூழ்நிலையில், தந்தையின் ஆலோசனை பெயரில் கோ (பசு) சாலை ஒன்றை தொடங்கினார்.
நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு விடலாம் என்று பெரிய நம்பிக்கையில் தொடங்கிய அந்த முயற்சி பலனளிக்காததால் அவரது குடும்பம் கடனில் மூழ்கியது. 2005ல் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் கிராமத்தில் இருந்து கோண்டாலா நகருக்கு சென்று விவசாய பணிகளை செய்தனர். ரமேஷ் மாடுகளை மேய்த்து மாதம் ரூ.80 சம்பாதித்தார். இந்த சூழ்நிலையில் சாகுபடி செய்த வெங்காயம் நல்ல விளைச்சலை கொடுத்தது, அதனை விற்பனை செய்தததில் அவர்களுக்கு ரூ.35 லட்சம் வருவாய் கிடைத்தது.
அப்போதுதான் ரமேஷ் தனக்கு பிடித்த மாடு தொடர்பான தொழிலை செய்ய முடிவு செய்தார். முதலில் கைவிடப்பட்ட பசுக்களை பராமரிக்க தொடங்கினார். இறுதியில் சில கிர் வகை மாடுகளை வாங்கி ஸ்ரீ கிர் கௌ க்ரிஷி ஜதன் சன்ஸ்தாவை நிறுவினார்.
ஆரம்பத்தில் பால் கறந்து அதனை விற்க தொடங்கினார். ஆனால் கிர் பசும்பாலின் வாசனை பற்றி வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இது அவருக்கு மோசமான அனுபவமாக இருந்தது. இதனையடுத்து பால் விற்கவே மாட்டேன் என்று தனக்குத்தானே சத்தியம் செய்து கொண்டார்.
இதனையடுத்து அவர் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து நெய் தயாரிக்க தொடங்கினார். தயாரித்த நெய்யை பிளாஸ்டிக் பாக்கெட் மற்றும் கண்ணாடி பாட்டில்களிலும் அடைத்து சைக்கிளில் எடுத்து சென்று விற்பனை செய்து வந்தார். நெய் குறித்து வாடிக்கையாளர்கள் நேர்மறையான கருத்துக்களை தெரிவித்தது அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. இது அவரை நெய் வியாபாரத்தில் இன்னும் ஆழமாக செய்ய வைத்தது.

பசுக்களுக்கு ஊட்டமளிக்கும் தீவனத்தை பற்றி கற்று கொண்டார். சாதாரண கிர் பசு நெய்யை தவிர, மருத்துவ குணம் கொண்ட கிர் நெய்யை தயாரிக்க தொடங்கினார். இதனால் அவரது வாடிக்கையாளர்கள் நெட்வொர்க்கும் விரிவடைந்தது. நெய் விற்பனையும் சூடு பிடித்தது.
நெய் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.2.5 லட்சம் வரை விலை போக தொடங்கியது. இன்று இவரிடம் 250 கிர் மாடுகள் உள்ளன. 123 நாடுகளுக்கு நெய் ஏற்றுமதி செய்கிறார். நெய் வணிகம் வாயிலாக ஆண்டுக்கு ரூ.8 கோடி சம்பாதிக்கிறார். மேலும், இந்த தொழிலில் ஈடுபட விரும்பும் ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு மாடு வளர்ப்பு மற்றும் நெய் தயாரிக்கும் தொழிலில் பயிற்சியும் அளிக்கிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications