கேப்பில் கெடா வெட்டிய சக்திகாந்த தாஸ்.. 5443 கிலோ தங்கம் வாங்கி குவித்துள்ளார்..!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி வரும் வேளையில் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது எத்தனை பேருக்குத் தெரியும்.

அதுவும் 2024 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அதிகப்படியான தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. மக்களைத் தங்கப் பத்திரத்தை வாங்கச் சொல்லிவிட்டுத் தங்கத்தை வாங்க என்ன காரணம்..?!

கேப்பில் கெடா வெட்டிய சக்திகாந்த தாஸ்.. 5443 கிலோ தங்கம் வாங்கி குவித்துள்ளார்..!

இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து தனது தங்க கையிருப்பை அதிகரித்து வருவதன் மூலம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ தகவல் படி பிப்ரவரி மாதத்தில் மட்டும் 6 டன் தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளது.

இதன் மூலம், 2024 ஆண்டு ரிசர்வ் வங்கி மொத்தம் 13 டன் தங்கத்தை வாங்கியுள்ளது, மொத்த தங்க கையிருப்பு தற்போது 817 டன்னாக உயர்ந்துள்ளது. 1 டன் என்பது 907.185 கிலோ.

இந்திய ரிசர்வ் வங்கி தனது தங்கக் கையிருப்பை அதிகரிப்பதற்கும், குறைப்பதற்குப் பல காரணங்கள் உள்ளது. இதில் முக்கியமாகப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முக்கியமான சொத்துக்களில் முதலீடு செய்வதில் துவங்கி, தனது அந்நிய செலாவணி கையிருப்பை பன்முகப்படுத்துவதற்கும், நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் சமாளிக்கவும் மற்றும் பொருளாதார பாதிப்புகளை குறைப்பதற்கும் இந்தியா தொடர்ந்து தனது தங்க கையிருப்பை அதிகரித்து வருகிறது. இத்தகைய நடவடிக்கை இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் அனைத்து பொருளாதார நாடுகளும் செய்கிறது.

2024 ஆம் ஆண்டு இந்தியா போலவே பிற நாடுகளும் தங்களுடைய தங்க கையிருப்பை அதிகரித்துள்ளது. உலக தங்கக் கவுன்சில் அறிக்கையின்படி, உலகளாவிய மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்க கையிருப்பைச் சேர்த்து வருகின்றன என்றாலும், ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதம் வாங்கப்பட்ட அளவு என்பது சற்று குறைவே.

2024 ஆம் ஆண்டில் இந்தியா, சீனா மத்திய வங்கிகள் அதிகப்படியான தங்க இருப்பை சேர்த்துள்ளது எனக் கூறப்படுகிறது. உலக தங்கக் கவுன்சிலின் EMEA (யூரோப், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா) பிரிவின் மூத்த ஆய்வாளர், கிருஷ்ண கோபால் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளாவிய மத்திய வங்கிகள் பிப்ரவரி மாதத்தில் 19 டன் தங்கத்தைச் சேர்த்துள்ளன.

இது தொடர்ந்து ஒன்பதாவது மாதமாகத் தங்கக் கையிருப்பு அதிகரிப்பைக் குறிக்கிறது என்றாலும், ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 58 சதவீதம் குறைவாகத் தங்கம் வாங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தங்கம் என்பது நிலையான மற்றும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. பொருளாதார தடுமாற்றத்தின் போது தங்கம் மீது அதிகமாக முதலீடு செய்யப்படும் இது ஒரு நாடாக இருந்தாலும் சரி, தனிநபராக இருந்தாலும் சரி இந்த பார்மூலா வொர்க்அவுட் ஆகும்.

தங்கத்தின் மதிப்பு எப்போதெல்லாம் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை உருவாகிறதோ, டாலர், யென், யூரோ போன்ற முக்கிய வர்த்தக நாணயங்களின் மதிப்பு குறைகிறதோ அப்போதெல்லாம் தங்கம் விலை அதிகரிக்கும் வாய்ப்பு கூடுதலாக உள்ளது.

இதன் காரணமாகவே உலகளாவிய மத்திய வங்கிகள் தங்கள் அந்நிய செலாவணி கையிருப்பை பன்முகப்படுத்துவதற்காக தங்கத்தை வாங்கி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியும் இதே போன்ற உத்தியைக் கடைப்பிடித்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+