மும்பை: தனிநபர்களிடமிருந்து ரூ.1 கோடி அல்லது அதற்கு குறைவான தொகைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் அனைத்து உள்நாட்டு குறித்த கால வைப்புகளுக்கும் முன்கூட்டியே திரும்ப பெறும் வசதி இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகள் callable மற்றும் non-callable என இரண்டு வகையான வைப்பு நிதிகளை (பிக்சட் டெபாசிட்) வழங்குகின்றன. callable பிக்சட் டெபாசிட்டுகளில் முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்பே வாடிக்கையாளர் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம். ஆனால் non-callable பிக்சட் டெபாசிட்டுகளில் முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன் பணத்தை திரும்ப பெற முடியாது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, உள்நாட்டு குறித்த கால டெபாசிட் அல்லது வங்கி பிக்சட் டெபாசிட்டை முதிர்வுக்கு முன்பே திரும்ப பெறுவதற்கான விதியை மாற்றியுள்ளது.
தற்போது வங்கிகள் ரூ.15 லட்சம் வரையிலான பிக்சட் டெபாசிகளுக்கு முதிர்வு காலத்துக்கு முன்பே திரும்ப பெறும் வசதியை வழங்குகின்றன. இப்போது இந்த தொகையை ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுஆய்வில், non-callable பிக்சட் டெபாசிட்டுகளை வழங்குவதற்கான குறைந்தபட்ச தொகையானது ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. உதாரணமாக, தனிநபர்களிடமிருந்து ரூ.1 கோடி அல்லது அதற்கு குறைவான தொகைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் அனைத்து உள்நாட்டு குறித்த கால வைப்புகளுக்கும் முன்கூட்டியே திரும்ப பெறும் வசதி இருக்கும்.
மேலும், முதிர்வு காலம் மற்றும் டெபாசிட் பணம் ஆகியவற்றின் அடிப்படையில் முன்கூட்டியே திரும்ப பெறும் வசதி இல்லாத non-callable பிக்சட் டெபாசிட்களுக்கு மாறுபட்ட வட்டி விகிதங்களை வங்கிகள் வழங்கலாம். இந்த விதிமுறைகள் என்.ஆர்.இ. மற்றும் என்.ஆர்.ஓ. டெபாசிட்களுக்கும் பொருந்தும். இந்த சுற்றறிக்கை அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். மேலும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அதில் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால், இனி வங்கிகளில் ரூ.1 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்களை முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே திரும்ப பெறும் வசதி டெபாசிட்தாரர்களுக்கு கிடைக்கும். வங்கிகள் தற்போது பிக்சட் டெபாசிட்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பிக்சட் டெபாசிட்டின் காலம், தொகையை பொறுத்து 7.60 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 7.75 சதவீதம் வரையிலும், எஸ்.பி.ஐ. 7.50 சதவீதம் வரையிலும், எச்.டி.எஃப்.சி. வங்கி 7.75 சதவீதம் வரையிலும் பிக்சட் டெபாசிட்களுக்கு (ஆண்டுக்கு) வட்டி வழங்குகின்றன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications