இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் பணபரிமாற்றம் மக்கள் மத்தியில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது என்றால் மிகையில்லை. இதனால் இனி வரும் காலத்தில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் வளரும் என்பது மறுக்க முடியாது என்பதைத் தவிர்க முடியாதா ஒன்றாக மாறிவிட்டது.
இப்படி இருக்கையில் டிஜிட்டல் மற்றும் பேமெண்ட் தளத்தைச் சார்த்து இந்தியாவில் சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்கள் போட்டியின் காரணமாக நாள்தோறும் உருவாகி வரும் நிலையில் இந்தப் போட்டியை மேலும் வலிமையாக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய முடிவை எடுத்துள்ளது.
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா
இந்திய பேமெண்ட் சந்தையில் இருக்கும் பேடிஎம், கூகிள் பே, போன் பே, அடுத்தச் சில வாரத்தில் வரவிருக்கும் வாட்ஸ்அப் பே என எல்லாவற்றுக்கும் ஒரே போட்டியாளராக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய திட்டத்தை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இப்புதிய திட்டத்தின் படி ஒரு வாடிக்கையாளர் 10,000 ரூபாய் வரையிலான சரக்கு மற்றும் சேவையை ப்ரீபெய்டு தளத்தைப் பேமெண்ட்-க்காகப் பயன்படுத்த ஏதுவாக அமைப்பை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது.
வங்கி முதல் வங்கி
மேலும் இந்தப் பணம் வங்கியில் இருந்து வங்கிக்கு மட்டுமே செல்லும் வகையில் அமைக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் பேண்மெண்ட் தளத்தின் மூலம் பில் கட்டணம், கடையில் பொருட்களை வாங்குதல், போன்ற அனைத்து வகையில் தினசரி பணப் பரிமாற்றங்களைச் செய்துக்கொள்ள முடியும்.
இதன் மூலம் தற்போது சந்தையில் இருக்கும் பேமெண்ட் செயலிகளில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கும்.
எளிய வழிமுறை
இப்புதிய பேமெண்ட் சேவை பயன்படுத்த வாடிக்கையாளர்களிடம் குறைந்த அளவிலான தகவல்கள் மட்டுமே கோரப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இச்சேவை பற்றிய முழு விபரத்தை டிசம்பர் அதாவது இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆதிக்கம்
தற்போது இந்தியாவில் செய்யப்படும் பெரும்பாலான டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அனைத்தும் யூபிஐ வாயிலாகவே நடைபெறுகிறது. அதாவது கூகிள் பே, பேடிஎம், மொபிவிக், ஹெடிஎப்சி வங்கியின் PayZapp, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் Yono ஆகிய அனைத்தும் UPI வாயிலாகத் தான் நடக்கிறது.
அதிரடி வளர்ச்சி
மேலும் தற்போது உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற துறையின் வளர்ச்சி இந்தியாவில் மிகவும் அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவை 30 முதல் 40 சதவீத மக்களுக்கு மட்டும் சென்றடைந்துள்ளது. மீதமுள்ள 60 சதவீத மக்களும் வளர்ச்சி அளவீடு தான்.
சீனாவில் தற்போது 90 சதவீத மக்களிடையே டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தான் உள்ளது. அப்படிப் பார்த்தால் இந்தியா மிகப்பெரிய அளவில் பின்தங்கியுள்ளோம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications